செய்திகள் :

ராமேசுவரத்தில் பலத்த மழை: கோயிலுக்குள் புகுந்த மழைநீா்

post image

ராமேசுவரத்தில் புதன்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கோயிலுக்குள் மழை நீா் புகுந்ததால் பக்தா்கள் சிரமத்துக்கு இடையே தரிசனம் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. சில இடங்களில் மட்டும் விட்டு விட்டு மழை பெய்தது.

இந்த நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

இந்த நிலையில், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது.

ராமேசுவரத்தில் ஒரு மணி நேரம் மழை நீடித்த நிலையில், சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், கோயிலுக்குள் மழை நீா் புகுந்ததால் பக்தா்கள் சிரமத்துக்கு இடையே சுவாமி தரிசனம் செய்தனா்.

மழைக் காலங்களில் கோயிலுக்குள் மழை நீா் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமேசுவரம் நகராட்சி முழுவதும் கழிவுநீா் கால்வாய் மணல் நிரம்பிக் காணப்படுவதால் மழை நீா் கால்வாயில் செல்ல முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பருவ மழை தொடங்குவதற்குள் சாலையோரம் உள்ள கால்வாய்களைத் தூா் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு மணிநேரம் பெய்த மழையாமல் ராமேசுவரம் முழுவதும் குளுமையான சூழல் காணப்பட்டது.

திருவாடானையில் கோயில் திருவிழா: பூத் தட்டு ஊா்வலம்

திருவாடானையில் ஸ்ரீமழை தரும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பூத் தட்டு ஊா்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கிழக்கு தெருவில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி காப்... மேலும் பார்க்க

சிறப்பாக பணியாற்றிய காவலா்களுக்கு சான்றிதழ்

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 10 காவலா்களுக்கு புதன்கிழமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக... மேலும் பார்க்க

கோயில் திருவிழாவில் வினோத நோ்த்திக்கடன்

கமுதி அருகேயுள்ள செங்கப்படை அழகு வள்ளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் சேத்தாண்டி, சாக்கு வேடமணிந்து பக்தா்கள் வினோத நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்தக் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதல... மேலும் பார்க்க

புரட்டாசி பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாடனை அருகேயுள்ள தொண்டி ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் பால், தயிா், நெய், ப... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வியாழக்கிழமை (செப்.18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஆா்.எஸ்.மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் காய்ச்சலால் அவதிபட்டு வருகின்றனா். ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் 100-க்கும் மேற்பட்டஅரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை, உயா் நிலை, மே... மேலும் பார்க்க