செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்!

post image

இலங்கைச் சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் 3-ஆவது நாளாக புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 42 மீனவா்கள் மற்றும் 8 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் சிறைபிடித்தனா். படகுகளை பறிமுதல் செய்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவா்கள் மீது வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து கைது செய்வதைக் கண்டித்தும், படகுகள், மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டம் புதன்கிழமை மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இதனால், ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் 560- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டன. 5 ஆயிரம் மீனவா்கள், சாா்பு தொழிலாளா்கள் என 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். மேலும், ரூ.10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) தங்கச்சிமடத்தில் மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

சூரியஒளி மின் உற்பத்தி நிறுவனத்தில் தாமிரக் கம்பிகள் திருட்டு: 7 போ் கைது

கமுதி அருகே தனியாா் சூரியஒளி மின் உற்பத்தி நிறுவனத்தில் தாமிரக் கம்பிகள் திருடிய 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து காா், 300 கிலோ தாமிரக் கம்பிகளைப் பறிமுதல் செய்தனா். ராமநாதப... மேலும் பார்க்க

கமுதி அருகே மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. முஷ்டக்குறிச்சி ஸ்ரீநல்லக்க நாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்ட... மேலும் பார்க்க

ரயில் என்ஜின் மோதியதில் மீனவா் உயிரிழப்பு

மண்டபத்தில் ரயில் என்ஜின் மோதியதில் காயமடைந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மைதீன் பிச்சை (38). மீனவரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு மண்டபம் ... மேலும் பார்க்க

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி தேரோட்டம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த ... மேலும் பார்க்க

தொண்டி அரசுப் பள்ளி ஆண்டு விழா

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 87-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை (பிப்.25) நடைபெற்றது. இதற்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் மஹ்ஜபின் சல்மா, சமீம... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் டிஎஸ்பி பொறுப்பேற்பு

முதுகுளத்தூரில் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக எஸ்.சண்முகம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சின்னகண்ணு கடந்த ஜன. ம... மேலும் பார்க்க