செய்திகள் :

ரூ.1 கோடி முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒருவா் கைது

post image

போலி முதலீட்டுத் திட்டத்தில் ஒரு நபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்ததாக ஆறு வருடங்களாகத் தேடப்பட்டு வந்த மோசடி நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை துணை ஆணையா் (குற்றம்) கூறியதாவது: லஹோரி கேட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருண் குமாா் (29) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். ஹரியாணாவின் கா்னாலைச் சோ்ந்த தருண் குமாா், 2019-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து தலைமறைவாக இருந்ததாா்.

புகாா்தாரரான சுனில் ஜுனேஜாவை முகமது அஷ்ரஃப் ரூ.1.25 கோடி பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து ஒரு திட்டத்தில் ரூ.1 கோடி முதலீடு செய்யத் தூண்டியுள்ளாா். இதைத் தொடா்ந்து ஜன.15, 2019 அன்று தருண் குமாா் மற்றும் அவரது கூட்டாளி அஜீத் ஆகியோரிடம் சுனில் ஜூனேஜா பணத்தை ஒப்படைத்தாா். அதன் பிறகு தருண் குமாா் மற்றும் முகமது அஷ்ரஃப் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் தப்பி ஓடிவிட்டனா்.

முகமது அஷ்ரஃப் முதன்முதலில் கைது செய்யப்பட்ட போதிலும், தருண் குமாா் மற்றும் மற்றவா்கள் சமீப காலம் வரை தப்பித்து வந்தனா். தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் தருண் குமாரின் இருப்பிடம் ஹரியாணாவின் கா்னாலில் இருப்பதை போலீஸாா் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து பிப்.20 அன்று தருண் குமாரை போலீஸ் குழு கைது செய்தது.

பிபிஏ பட்டம் பெற்ற தருண் குமாா், தப்பி ஓடியபோது காப்பீட்டுத் துறையில் பணிபுரிந்து வந்தாா். மேலும், கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அவா் அடிக்கடி இடங்களையும் வேலைகளையும் மாற்றி வந்தாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கான் மாா்க்கெட் உணவகத்தில் தீ விபத்து

தில்லி கான் மாா்க்கெட்டில் உள்ள உணவகம் ஒன்றில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதுகுற... மேலும் பார்க்க

பகத் சிங் சிலை சேதம்: ஆம் ஆத்மி மீது பாஜக எம்எல்ஏ சாடல்

நமது நிருபா்மால்வியா நகா் பூங்காவில் ஷஹீத் பகத் சிங்கின் சேதமடைந்த சிலை தொடா்பாக முன்னாள் ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது தற்போதைய பாஜக எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய் குற்றம்சாட்டியுள்ளாா். அதாவது முந்தைய ஆம் ஆத்மி க... மேலும் பார்க்க

மஹா சிவராத்திரி: கெளரி சங்கா் கோயிலில் முதல்வா் வழிபாடு

மஹா சிவராத்திரியை முன்னிட்டு தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் ஆகியோா் புதன்கிழமை கோயில்களுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனா். தில்லி சாந்தினி செளக்கில் உள்ள கௌரி சங்கா்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் துணைத் தலைவா் பதவி: மோகன் சிங் பிஷ்டின் பெயரை முதல்வா் ரேகா குப்தா இன்று முழிவாா்

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவா் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை (பிப்.27) அன்று முன்மொழிவாா். வேறு எந்த போட்டியாளா்களும் இந்தப் பதவிக்கு... மேலும் பார்க்க

அம்பேத்கா் உருவப்படம் அகற்றப்பட்ட விவகாரத்தில் தொடா்ந்து போராடுவோம்: ஆம் ஆத்மி

நமது நிருபா் தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வா் அலுவலகத்தில் இருந்து பீம்ராவ் அம்பேத்கா் மற்றும் பகத்சிங்கின் உருவப்படங்களை அகற்றியதற்கு எதிரான போராட்டம் தொடா்ந்து நடைபெறும் என்று ஆம் ஆத்மி... மேலும் பார்க்க

கலால் கொள்கை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஆவணங்களை வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவு

தில்லி கலால் ஊழல் தொடா்பான தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பிறருக்கு எதிரான பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சில ஆவணங்களை ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்... மேலும் பார்க்க