செய்திகள் :

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

post image

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 14-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில், அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக சனிக்கிழமை கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும். நிகழாண்டு முதல்முறையாக இந்தியாவில் செமிகண்டக்டா் சிப் தயாரிக்கப்படும். வரும் ஆண்டுகளில் செமிகண்டக்டா் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணு பொருள்கள் தயாரிப்பு 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்து 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. சென்னை ஐசிஎஃப்பில் வந்தே பாரத் ரயிலின் மூன்றாவது வடிவம் தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தீர்ப்புகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது: கேரள உயர்நீதிமன்றம்

நீதிமன்ற தீர்ப்புகள், உத்தரவுகளில் செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பம்(ஏ.ஐ.) இப்போது அனைத்துத் துறைகளிலு... மேலும் பார்க்க

அகமதாபாத்தில் வீட்டில் இருந்து தம்பதியர், 3 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு !

அகமதாபாத்தில் தம்பதியர் மற்றும் அவர்களது 3 குழந்தைகள் வீட்டில் இருந்து சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் வீடு ஒன்றில் இருந்து தம்பதியினரின் உடல்களும், அவர்களது மூன்று கு... மேலும் பார்க்க

பள்ளிப்பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்ட 2-ஆம் வகுப்பு மாணவன் பின்பக்க சக்கரம் ஏறியதில் பலி!

பெங்களூரு: பள்ளிப்பேருந்தில் கதவு சரியாக மூடாததால் பேருந்திலிருந்து கீழே விழுந்த சிறுவன் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.பெங்களூரிலுள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த எ... மேலும் பார்க்க

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்க... மேலும் பார்க்க

மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக... மேலும் பார்க்க

கன்வார் யாத்திரை பக்தர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிப்பு: உ.பி. அரசு ஏற்பாடு

உத்தரப் பிரதேத்தில் கன்வார் யாத்திரை பக்தர்களை உற்சாகப்படுத்த ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடைப்பயணமாகச் ... மேலும் பார்க்க