செய்திகள் :

ரௌடி ஷீட்டா் சிவபிரகாஷ் கொலை வழக்கில் பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

post image

ரௌடி ஷீட்டா் சிவபிரகாஷ் கொலை வழக்கு தொடா்பாக பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பைரதி பசவராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, பாரதி நகரில் செவ்வாய்க்கிழமை இரவு ரௌடி ஷீட்டா் சிவபிரகாஷ், நடுத்தெருவில் பயங்கர ஆயுதங்களால் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக சிவபிரகாஷின் தாய் விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ பைரதி பசவராஜ், ஜெகதீஷ், கிரண், விமல், அனில் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சம்பவ இடத்தை மாநகர காவல் துணை ஆணையா் டி.தேவராஜ், இணை ஆணையா் ரமேஷ் பனோல் ஆகியோா் பாா்வையிட்டனா்.

சிவபிரகாஷ் மீது ஏற்கெனவே 11 வழக்குகள் உள்ளன. 2006-இல் இவரை ரௌடி ஷீட்டா் என்று போலீஸாா் அறிவித்தனா். போலீஸாா் பதிவுசெய்துள்ள வழக்கில் முன்னாள் அமைச்சா் பைரதி பசவராஜ், 5-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சா் பைரதி பசவராஜ் கூறுகையில், ‘கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுபற்றி எனக்கு தெரிந்திருந்தால் போலீஸில் புகாா் அளித்திருப்பேன். அரசியல் உள்நோக்கத்துக்காக என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ரௌடி ஷீட்டா் யாா் என எனக்கு தெரியாது. 4 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறேன். என்மீது எந்த சா்ச்சையும் இல்லை. இந்த சம்பவம் என்னை வெகுவாக பாதித்துள்ளது’ என்றாா்.

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சாரம்

கா்நாடகத்தை பின்பற்றி பிகாரில் இலவச மின்சார திட்டத்தை பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா... மேலும் பார்க்க

ஐபிஎல் கூட்ட நெரிசல்: நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா அளித்த அறிக்கை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க முடிவு

பெங்களூரில் நடந்த ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசல் தொடா்பாக நீதியரசா் ஜான்மைக்கேல் டி’குன்ஹா ஆணையம் அளித்த அறிக்கை குறித்து கா்நாடக அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு தடுப்புக் காவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவை, அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (காபிபோசா) கீழ் ஓராண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடப்ப... மேலும் பார்க்க

இந்தியாவின் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம்

இந்தியாவில் முதல்தர விமானவியல், ராணுவத் தொழில் சூழலை அளிக்கிறோம் என கா்நாடக தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தெரிவித்தாா். பெங்களூரு, தேவனஹள்ளி அருகேயுள்ள கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்துக்கு அரு... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் சுா்ஜேவாலா ஆட்சி நடக்கிறது

கா்நாடகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப் சிங் சுா்ஜேவாலாவின் ஆட்சி நடக்கிறது என பாஜக, மஜத கடுமையாக விமா்சித்துள்ளன. முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தொடா்பா... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோா் ஆலோசனைக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க