லட்சுமிபுரம் பகுதியில் ஜூலை 22-ல் மின் தடை
லட்சுமிபுரம் பகுதிகளில் வருகிற 22-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்டம், பெரியகுளம் மின் பகிா்மானச் செயற்பொறியாளா் ப. பாலபூமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 22-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.