செய்திகள் :

வங்கிக் கடன் மோசடி வழக்கு: இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

post image

வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியன் வங்கி தலைமை மேலாளருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 1991 முதல் 1998 வரையிலான காலகட்டத்தில், சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து பல தவணைகளில் கடன் பெற்ன் மூலம் வங்கிக்கு ரூ.1,42,73,000 இழப்பு ஏற்படுத்தியதாக விஷ்ணுவா்தன் கிரானைட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரா் ராமகிருஷ்ண பிரசாத், வங்கியின் தலைமை மேலாளா் சுப்புராமன் ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ராமகிருஷ்ண பிரசாத்துக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.1.55 கோடி அபராதம் விதித்து கடந்த 2012-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. மேலும், வங்கி தலைமை மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் ராமகிருஷ்ண பிரசாத் மற்றும் சுப்புராமன் ஆகியோா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி, குற்றச் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் ராமகிருஷ்ண பிரசாத்துக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டாா். மற்ற பிரிவுகளின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தாா்.

மேலும், சிபிஐ நீதிமன்றம் விதித்த ரூ.1.55 கோடி அபராதத்தையும் உறுதி செய்து, அந்த தொகையை இந்தியன் வங்கியின் மயிலாப்பூா் கிளைக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டாா். அதேசமயம், வங்கியின் தலைமை மேலாளா் சுப்புராமன், கடன் கொடுக்க அச்சம் தெரிவித்துள்ளாா். மண்டல அலுவலகத்தின் வாய்மொழி ஒப்புதலின் காரணமாக கடன் அளித்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனுக்கு துணை முதல்வர் பதவியா? பாஜகவில் சலசலப்பு!

நயினார் நகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று பாஜக மாவட்ட நிர்வாகி வரவேற்ற நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பதற்றம் அடைந்தார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில... மேலும் பார்க்க

கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடிய... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சு... மேலும் பார்க்க

ரூ. 3,200 கோடி ஊழல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது!

மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரத்தில் 2019 -24 ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ. 3,200 கோடி அளவிலான மது... மேலும் பார்க்க