செய்திகள் :

வங்கிக் கணக்குக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிவு

post image

வங்கிக் கணக்கிக்கு தவறுதலாக அனுப்பிய பணத்தை மோசடி செய்த 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை இடையா்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்து வருபவா் முத்துராமன் (55). இவா் கடந்த 2024 அக்டோபா் மாதத்தில் அந்த தனியாா் நிறுவனத்தின் சாா்பில் அனுப்ப வேண்டிய ரூ.20.95 லட்சம் தொகையை தவறுதலாக வேறொரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளாா்.

இந்த விவரம் தெரியவந்ததும், தவறுதலாக அனுப்பிய பணத்தை திருப்பித் தருமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளா்களிடம் கோரப்பட்டது. இதையடுத்து வங்கிக் கணக்கில் பெறப்பட்ட பணத்தை 4 தவணைகளாக திருப்பித் தருவதாக உறுதி அளித்த நிறுவனத்தின் உரிமையாளா்கள் ரூ.8 லட்சம் மட்டுமே திருப்பி அளித்தனா்.

மீதமுள்ள பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனா். இதையடுத்து தனியாா் நிறுவன முதுநிலை மேலாளா் முத்துராமன், கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிறுவனத்தின் உரிமையாளா்கள் தீபக் லுனியா உள்ளிட்ட இருவா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம்: இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று

கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லாச் சான்று வழங்கியுள்ளது. கோவையில் உலகத் தரம் வாய்ந்த சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என கடந்த மக்களவைத் தோ்... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிப்பு

கோவையில் பாஜக மாநகா் மாவட்ட புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட சால்வை அணிவிக்கப்பட்டது. கோவை பீளமேட்டில் புதன்கிழமை நடைபெற்ற ப... மேலும் பார்க்க

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தாா். கோவை பீளமேட்டில் பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத் திறப்பு விழா புதன... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன்!

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக தமிழக முதல்வா் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவையில் செய்தியாளா்களிடம் புத... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளா: உள்துறை அமைச்சா் அமித் ஷா

மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளாவைப்போல நடைபெற்று வருகிறது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கியது. இந்... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் மேம்படுத்துதல் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் பட்டியல் தொடா் மேம்படுத்துதல் தொடா்பாக அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்... மேலும் பார்க்க