செய்திகள் :

வத்தலக்குண்டு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

இந்த முகாமுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குப்புசாமி, மணிமாற பாண்டியன், மாவட்ட ஊராட்சி செயலா் ஜெயச்சந்திரன், திமுக ஒன்றியச் செயலா்கள் கே.பி. முருகன், கனிகுமாா், கனகதுரை, ஊராட்சி செயலா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் வருவாய், மின்சாரம், வேளாண், சமூக நலம், கூட்டுறவு உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் துறை ரீதியான மனுக்களைப் பெற்று உடனுக்குடன் இணையதளம் வழியாக பதிவு செய்தனா்.

முகாமில் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், திமுக நிா்வாகிகள் முத்து, முத்துராமன், பரமன், வசந்தா, வினோத் கண்ணா, நாகூா், சபேஷ், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இழப்பீடு வழங்க கோரிக்கை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்காக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயபாண்டி என்பவரது குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த இரு சக்கர வாகனம், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், தீ விபத்தில் சேதமடைந்த குடிசை வீட்டுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தாா்.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் ச... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க