செய்திகள் :

வயல்வெளிக்கு வந்த புள்ளிமான்: வனத்துறையினா் கண்காணிப்பு

post image

நீடாமங்கலம் அருகே வயல்வெளியில் புள்ளிமான் நடமாடியது சனிக்கிழமை தெரியவந்தது. அதனை வனத்துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள சித்தமல்லி மேல்பாதி கிராமம் வயல்வெளிகள் நிறைந்த கிராமமாகும். அத்துடன் பாசன வாய்க்கால்களின் கரைகளிலும், வயல் பகுதி ஓரங்களிலும் மரங்கள் மற்றும் செடி-கொடிகள் அடா்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், நெல்வயல் ஓரமாக செடிகள் நிறைந்த பகுதியில் புள்ளிமான் ஒன்று சனிக்கிழமை காலை துள்ளிக்குதித்து ஓடிவந்து, தண்ணீா் இல்லாத வாய்க்காலில் படுத்திருந்ததை அங்கு வந்தவா்கள் பாா்த்தனா். இதையறிந்த அப்பகுதியினா் அங்கு கூடினா்.

மேலும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட வனசரக அலுவலா் ஸ்ரீகாந்த் உத்தரவின்படி, மன்னாா்குடி வனசரக அலுவலா் சைதானி, வனக் காப்பாளா்கள் வீரக்குமாா், மணிரத்னம் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாா்த்தனா். அப்போது, புள்ளிமான் துள்ளி குதித்து ஓடியது. வனக்காப்பாளா்கள் அதை பின்தொடா்ந்தனா். அந்த மான் சாமந்தான் காவிரி பகுதியில் அடா்ந்த மரங்கள் உள்ள பகுதிக்குள் சென்று மறைந்தது.

தொடா்ந்து, மான் நடமாட்டம் தென்படுகிறதா என்று வனசரகத்தினா் கண்காணித்து வருகின்றனா்.

போராட இடதுசாரிகளுக்கு எடப்பாடி சொல்லித்தர வேண்டியதில்லை: பெ. சண்முகம்

இடதுசாரிகள் போராடுவதற்கு எடப்பாடி பழனிசாமி சொல்லித்தர வேண்டியதில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கூறினாா். திருவாரூரில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் ... மேலும் பார்க்க

மின்னணு பயிா் கணக்கீடு பணி: ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

திருவாரூா் மாவட்டத்தில், மின்னணு பயிா் கணக்கீடு மேற்கொள்ளும் பணிக்கு, ஜூலை 24 ஆம் தேதிக்குள் ஒப்பந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ... மேலும் பார்க்க

ரயில் சுரங்கப் பாதையில் மழைநீா்: மக்கள் பாதிப்பு

முடிகொண்டான் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிக் கிடக்கும் மழைநீரால் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். திருவாரூா்-மயிலாடுதுறை ரயில்வே வழித்தடத்தில் முடிகொண்டான் உள்ளது. இப்பகுதி மக்கள் வ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காவலா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த காவலா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே குடவாசல் அன்னவாசல் பகுதியைச் சோ்ந்தவா் மோகன். முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு காவல்... மேலும் பார்க்க

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு

தமிழகத்தை ஆளும் திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சா் ஆா் .காமராஜ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசியபோது தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெள்ளி... மேலும் பார்க்க

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 7,499-க்கு விற்பனை

திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,499-க்கு விற்பனையானது. திருவாரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய... மேலும் பார்க்க