செய்திகள் :

வரதட்சிணை கேட்டு மனைவியைத் தாக்கிய காவலர் கைது!

post image

வரதட்சிணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை அப்பன்திருப்பதி காவல் நிலைய காவலா் பூபாலன் (38). இவரது மனைவி தங்கப்பிரியா (32). இவா் தனியாா் பள்ளி ஆசிரியை. இவா்களுக்கு கடந்த 2018-ல் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனா். திருமணத்துக்குப் பிறகு, கூடுதல் வரதட்சிணை கேட்டு பூபாலன் தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அண்மையில் கணவன்- மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பூபாலன் தனது மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மனைவி தங்கப்பிரியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தங்கப்பிரியாவின் குடும்பத்தினா் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வரதட்சிணை கேட்டு மனைவியை கடுமையாகத் தாக்கியது பற்றி பூபாலன் தனது சகோதரியுடன் செல்போனில் பேசியது பதிவாகியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பூபாலன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் பூபாலனையும், அவரது தந்தை விருதுநகா் சாத்தூரில் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் செந்தில்குமரனையும் பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் அபினவ்குமாா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதனிடையே காவலர் பூபாலன் உள்ளிட்டோர் தலைமறைவானதையடுத்து தனிப்படை போலீசார் அவர்களைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் பூபாலனை போலீசார் இன்று(சனிக்கிழமை) கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் முன்பாக அவர் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

செந்தில்குமரன் உள்ளிட்ட மற்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Police constable Bhoopalan from Madurai has been arrested in connection with the case of torturing his wife for demanding dowry.

இதையும் படிக்க | 24-வது முறையாக டிரம்ப் பேச்சு! கூட்டத்தொடரில் மோடி பதிலளிக்க வேண்டும்! - காங்கிரஸ்

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேர... மேலும் பார்க்க

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார் !

ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஜூலை 20) தமிழகத்தில் நீலகிரி, கோவையில் கனம... மேலும் பார்க்க

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நாளை(ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

பாமகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்! - ராமதாஸ் உத்தரவு

பாமகவில் இருந்து சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கறிஞர் பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்... மேலும் பார்க்க

கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?

கூட்டணி பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "2026 த... மேலும் பார்க்க