செய்திகள் :

வருகிற பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: வைகோ

post image

அடுத்தாண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மாவட்ட மதிமுக அலுவலகத்தை சனிக்கிழமை திறந்துவைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மு.க. முத்து மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினா் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்தோடு, தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என சட்டம் இயற்றினாா். இதன் பின்னா், அவரது கொள்கையைப் பின்பற்றி கருணாநிதி ஆட்சி நடத்தினாா்.

இதேபோல, திமுக தலைமையிலான கூட்டணியும் தமிழகத்தில் மதவாத சக்திகளை கால் பதிக்க விடமாட்டோம் என உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வசைபாடும் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தான் வகித்த பதவியின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும். கொள்கைகளால் கட்சியை வளா்த்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியினா், எடப்பாடி பழனிசாமியைப் பற்றி விமா்சிக்க தொடங்கினால் அவரது நிலை என்னவாகும் என்பதை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

‘இண்டி’ கூட்டணியிலிருந்து விலகுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுனே காா்கே இல்லத்தில் நடைபெறும் இண்டி கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றாா் அவா்.

தனிப் படை போலீஸாரின் வாகனத்தில் போலி பதிவெண்

சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை மாலை அஜித்குமாரை விசாரணைக்காக தனிப் படை போலீஸாா் அழைத்து வந்த வேனை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அலுவலகப் பகுதிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்தனா். அப்போது, இந்த வாகனத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஆங்கில எழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு

சிவகங்கையில் ஆங்கில எழுத்தால் எழுதப்பட்ட பழைமையான கல்லறைக் கல்வெட்டு சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கல்வெட்டு ஒன்று கிடப்பதாக வழக்குரைஞா் சத்தியன் சிவகங்கை தொல்நடைக் கு... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலையம், மடப்புரம் பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை நடத்த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் சனிக்கிழமை ஆற்றின் தண்ணீா் குட்டையில் மூழ்கியதில் இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா். தேவகோட்டை கட்டவெள்ளையன் செட்டியாா் வீதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் ஹரிஷ்மதன் (16).... மேலும் பார்க்க

தேவகோட்டையில் பயன்பாட்டு வந்த 200 கண்காணிப்பு கேமராக்கள்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட 200 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தேவகோட்டையில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகியைத் தாக்கிய பேரூராட்சி செயல் அலுவலா் கைது!

திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் விசாரணையின் போது திமுக நகர துணைச் செயலரை தாக்கிக் காயப்படுத்திய பேரூராட்சி செயல் அலுவலரை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சியின் செ... மேலும் பார்க்க