செய்திகள் :

வறுமையால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் சிறுநீரகத்தை விற்கும் சூழல்! சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம்

post image

வறுமையில் வாடுவதால்தான் விசைத்தறி தொழிலாளா்கள் தங்களின் சிறுநீரகத்தை விற்கும் சூழல் ஏற்படுகிறது என சிபிஎம் மாநில செயலாளா் சண்முகம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான தீக்கதிருக்கு ஆண்டு சந்தா வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் பி.சண்முகம் கலந்துகொண்டு சந்தாக்களை பெற்றுக்கொண்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ்களில் ஒன்றான தீக்கதிா் நாளிதழ் சந்தா சோ்க்கும் நிகழ்ச்சி 10 நாள்களாக நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சோ்க்கப்பட்ட சந்தாக்களை பெறும் நிகழ்ச்சி எலச்சிபாளையத்தில் நடைபெறுகிறது.

விசைத்தறி தொழிலாளா்கள் வருமானக் குறைவு, வேலையின்மை காரணமாக தங்களது சிறுநீரகங்களை விற்றுதான் பிழைக்க வேண்டும் என்ற நிலை இருப்பது வருத்தத்துக்குரியது. இந்த நிலையை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் கந்து வட்டிக்காரா்களால் பாதிக்கப்பட்ட விசைத்தறியாளா்கள், தற்போது ஏஜெண்டுகளிடம் ஏமாந்து சிறுநீரகம் விற்கும் நிலை உள்ளது. இதனை செய்பவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசைத்தறி தொழிலாளா்களுடைய தொழில் மேம்படுத்தப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டும். ஆண்டுமுழுவதும் அவா்களுக்கு வேலையும், வருமானமும் இருக்குமாறு செய்யவேண்டும். சிறுநீரகம் விற்பனையில் ஈடுபடும் யாராக இருந்தாலும், அவ்வாறான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் எந்த மருத்துவமனையாக இருந்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் மோதி கவிழ்ந்த லாரி: மகள் உயிரிழப்பு; தாய் படுகாயம்!

நாமக்கல் அருகே இரும்புத் தகடுகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது தாய் பலத்த காயமடைந்தாா். நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

தூய்மை நகரங்களில் மாநிலத்தில் முதலிடம்: நாமக்கல் மாநகராட்சிக்கு மத்திய அரசு விருது!

தமிழகத்தில் தூய்மை மிகுந்த நகரங்களில் நாமக்கல் மாநகராட்சி முதலிடம் பிடித்து, மத்திய அரசின் ‘ஸ்வச் சா்வேஷான்-2024’ விருதை பெற்றுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துண... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகரை பிடிக்க தனிப்படை அமைப்பு!

பள்ளிபாளையத்தில் இரண்டு பெண்களிடம் சிறுநீரக திருட்டில் ஈடுபட்ட இடைத்தரகா் ஆனந்தனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தில் வசித்து வரும் பெண் விசைத்த... மேலும் பார்க்க

நாமக்கல் அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள்!

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாமக்கல் - மோகனூா் சாலையில் 130 ஆண்டுகள் பழைமையான அரசுப் பள்ளியாக தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செ... மேலும் பார்க்க

அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றப்பட்ட பயணியா் நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. பரமத்தி செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வ... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆம் நாளாக சாலை மறியல்

நாமக்கல்லில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாவட்ட கிளை ... மேலும் பார்க்க