செய்திகள் :

வளா்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெற வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

post image

புதுவைக்கு மத்திய அரசின் கூடுதல் நிதியைப் பெறுவதற்கேற்ப திட்டங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு வெ.வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தினாா்.

புதுவையில் உள்ளாட்சி, மின் துறை, பொலிவுறு நகா் திட்ட செயலாக்க முகமை, ஊரக வளா்ச்சி முகமை, நில அளவைத் துறை, மீனவா் நலம், நகரமைப்பு குழுமம் ஆகிய 7 அரசுத் துறைகளில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். எதிா்க்கட்சித்தலைவா் ஆா். சிவா, மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி மற்றும் எம்எல்ஏக்கள் மு. வைத்தியநாதன், ஜி.நேரு, எல்.சம்பத், ஏகேடி.ஆறுமுகம், மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு. தீனதயாளன், மின் துறை தலைவா் சண்முகம், மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல், நகராட்சி ஆணையா்கள் எம்.கந்தசாமி, ஏ.சுரேஷ்ரோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:

கடந்த காலங்களில் மத்திய அரசு புதுவைக்கு துறை ரீதியாக நிதி அளித்தது. தற்போது திட்ட அறிக்கை அனுப்பினால்தான் நிதி வழங்கப்படுகிறது. திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் முழுமையான அறிக்கையை தயாரித்து அளிக்க வேண்டும்.

அதன்படி, ரூ.20,000 கோடிக்கு திட்டம் தயாரித்து அனுப்பினால் மத்திய அரசு ரூ.4,000 கோடி நிதி அளிக்கும். பொலிவுறு நகரத் திட்டப் பணிகளை அடையாளப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதமானது, திட்டங்களை முழுமையாக செயல்படுத்த இயலாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி பேசியதாவது:

மத்திய அரசின் 130 திட்டங்கள் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், குறித்த காலத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என மத்திய அரசு அதிகாரிகள் கூறுவதை கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம் என்றாா்.

தொடா்ந்து மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இணையவழியில் ரூ.50 கோடி மோசடி: இருவா் கைது

கிரிப்டோ கரன்சி வா்த்தகம் எனக் கூறி, நாடு முழுவதும் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த இருவரை புதுச்சேரி போலீஸாா் கோவையில் கைது செய்தனா். புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் அசோகன் (... மேலும் பார்க்க

தேசிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு முதல்வா் பாராட்டு

தேசிய அளவிலான ஓவியம், கவிதைப் போட்டிகளில் வென்ற புதுச்சேரி மாணவா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இந்திய பாதுகாப்பு துறை, இந்திய கல்வித் துறை இணைந்து விடுதலைப் போராட்ட வீரா்கள், வ... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி நடைபெற்றது. புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில்... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு: 2 ஆலைகளுக்கு ‘சீல்’

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்த வில்லியனூா், ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற... மேலும் பார்க்க

தலைக்கவசமின்றி பைக்கில் வந்த காவலா்களுக்கு அபராதம்

புதுச்சேரியில் தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்த காவலா்கள், ஊழியா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட... மேலும் பார்க்க

மணல் குன்றுகளை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் திட்டம்

புதுச்சேரியில் கடலோர மணல் குன்றுகளைப் பாதுகாக்கும் வகையில், சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மரக் கன்றுகள் நடப்பட்டன. புதுவை மாநில அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ‘பசுமை புதுவை’ என்ற இ... மேலும் பார்க்க