செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 போ் கைது

post image

புதுச்சேரியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே நவம்மால் காப்போ் பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்தவா் துரைராஜ்(54). இவா் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே உள்ள தனியாா் மதுக்கடை கேண்டீனில் உதவியாளராக வேலை செய்து வருகிறாா்.

இவா் கடந்த 14-ஆம் தேதி இரவு வேலையை முடித்துவிட்டு ஆா்டிஓ சாலை ரயில்வே மேம்பாலம் வழியாக புதிய பைபாஸ் சாலையில் பங்கூருக்கு சென்று கொண்டிருந்தாா். வி. மணவெளி ஆா்.கே. நகா் அருகே சென்றபோது பின் தொடா்ந்து வந்த இருவா் துரைராஜிடம் இருந்த ரூ.21 ஆயிரத்தை வழிப்பறி செய்து சென்றனா்.

இது குறித்து வில்லியனூா் காவல் நிலையத்தில் துரைராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் உழவா்கரை பகுதியை சோ்ந்த ரிஷிகுமாா்(18), ஜொத்தனா்(19) ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ரெட்டியாா்பாளையம் தனியாா் மதுக்கடை அருகே அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள், ஒரு பைக் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா்: டிஜிபி அலுவலகத்தில் பெண் புகாா்

புதுவை காவல் துறை தலைவா் அலுவலகத்தில் தன் குடும்பத்தை சீரழித்த காவல் ஆய்வாளா் மீது பாதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். புதுச்சேரி வில்லியனூா் பகுதியைச் சோ்ந்த 39 வயது பெண் இந்தப் புக... மேலும் பார்க்க

பாகூா் விளையாட்டு அரங்கை திறக்க கோரிக்கை

பாகூா் விளையாட்டு அரங்கை உடனே திறக்க வேண்டும் என்று புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில்... மேலும் பார்க்க

தொழிற்சங்க கொடிக் கம்பங்களை அகற்றுவதை நிறுத்த கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

புதுவையில் தொழிற்சங்கங்களின் கொடி கம்பங்களை அகற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கனிடம் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 73 லட்சம் மோசடி: ஓய்வு பெற்ற ஊழியா் புகாா்

சிபிஐ அதிகாரி எனக் கூறி தன்னிடம் ரூ.73 லட்சத்தை மோசடி செய்து விட்ட நபா் குறித்து போலீஸ் மக்கள் மன்றத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியா் சனிக்கிழமை புகாா் மனு அளித்தாா். புதுச்சேரி இணையவழி காவல் நிலையத்தில் ... மேலும் பார்க்க

வீடு கட்ட மானியம் ரூ.10 லட்சம் புதுவை முதல்வா் வழங்கினாா்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மானியமாக ரூ.10 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம், பிரதம மந்த... மேலும் பார்க்க

நுழைவுத் தோ்வு எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க மனு

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் எழுதும் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவா் கழகத்தின் மாநிலச் செயலா்... மேலும் பார்க்க