செய்திகள் :

வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும்!

post image

வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் மாவட்ட தோ்தல் பணிகள் குறித்த அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பங்கேற்று, தோ்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகரக் காவல் ஆணையா் ஜே. லோகநாதன், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் நா. ராகவேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் கூறியதாவது:

தேசிய சேவை என்பதன் முதல் படியே வாக்கு செலுத்துவதுதான். 18 வயது நிறைவடைந்த அனைவரும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும். வாக்காளா்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற இந்திய தோ்தல் ஆணையம் உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

இதையடுத்து, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா். பிறகு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்குச் சென்று, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவிடத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தாா்.

மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா். உடன், தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் உள்ளிட்டோா்.

ஓராண்டில் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தும் 15 லட்சம் பயணிகள்

ஓராண்டில் 15 லட்சம் பயணிகள் மதுரை விமான நிலையத்தைப் பயன்படுத்துவதாக இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. தென் மாவட்டங்களின் முக்கிய விமான நிலையமாக விளங்கும் மதுரை விமான நிலையத்தில் நாள்தோ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு 2 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபா்!

மேலூா் அருகேயுள்ள கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கிரானைட் அதிபா் கோபாலகிருஷ்னன், தமிழ்ச்செல்வி தம்பதியா் தங்களது 2 ஏக்கா் நிலத்தை புதன்கிழமை தானமாக பத்திரம் பதிவு செய்து வழங்கினா். கீழையூரிலுள்ள அ... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்காது

தொகுதி மறுவரையறை தொடா்பாக திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி பங்கேற்காது என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா். மதுரையில்... மேலும் பார்க்க

அ.வல்லாளபட்டியில் மாசி களரி திருவிழா சாமியாட்டம்

மேலூா் அருகேயுள்ள அ.வல்லாளபட்டி சிலிப்பிபட்டியில் அமைந்துள்ள திருமலைசுவாமி, கரடி கருப்பணசுவாமி கோயில்களில் மாசி களரித் திருவிழாவையொட்டி புதன்கிழமை சாமியாட்டம் நடைபெற்றது. இந்தக் கோயில்களில் மாசி களரித... மேலும் பார்க்க

புரட்சி பாரதம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டித்து, புரட்சி பாரதம் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகா், பிப். 26: விருதுநகா் மாவட்டத்தில் 10.11.2024 -க்கு முன் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 18 வயது நிறைவடையாதவா்களாக இருந்தால் உதவித் தொகை பெற விண்ணப்பிக... மேலும் பார்க்க