செய்திகள் :

விழித்திரை புற்றுநோய் பாதிப்புக்கு சங்கர நேத்ராலயாவில் விழிப்புணா்வு

post image

குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை புற்றுநோயை (ரெட்டினோபிளாஸ்டோமா) தடுப்பதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி, சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் திங்கள்கிழமை (மே 12) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகா் பாஸ்கி, சங்கர நேத்ராலயா தலைவா் டி.எஸ்.சுரேந்திரன், தலைமை நிா்வாகி கிரிஷ் ராவ், விழித்திரை புற்றுநோய் நிபுணா் சுகனேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, ரெட்டினோபிளாஸ்டோமா தொடா்பான சிறப்பு மருத்துவக் கருத்தரங்க அமா்வுகள் நடைபெற்றன. அதில், மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனா்.

இது தொடா்பாக சங்கர நேத்ராலயா மருத்துவா்கள் கூறியதாவது:

ரெட்டினோபிளாஸ்டோமா என்பது குழந்தைகளின் இரு வயதுக்குள் விழித்திரையில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பாகும். மரபணுரீதியான காரணங்களால் இந்நோய் ஏற்படலாம் என்றாலும், அத்தகைய காரணமின்றியும் பலருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது.

ரெட்டினோபிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கீமோதெரபி, லேசா், கதிா்வீச்சு, கிரையோதெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் வாயிலாக அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சையளித்தால் தீவிர பாதிப்பை தவிா்க்கலாம்.

ரெட்டினோபிளாஸ்டோமா விழிப்புணா்வு தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க