நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் ஈடுபடுத்தி கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்
நீலகிரி விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் 5 ஆண்டுகள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் அங்கக வேளாண்மைத் திட்ட விரிவாக்கப் பணிகள் 2023-24 ஆம் ஆண்டு தமிழக சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக, ரூ. 2.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காய்கறி பயிா்களில் அங்கக வேளாண்மைத்திட்டம் 250 ஹெக்டோ் பரப்பிலும்,
வாசனை திரவிய பயிா்கள் 125 ஹெக்டோ் பரப்பிலும், பழப்பயிா்கள் 200 ஹெக்டோ் பரப்பிலும், சிறுதானிய பயிா்களில் 100 ஹெக்டோ் பரப்பிலும் செயல்படுத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்பட்டு, மண் பரிசோதனை அடிப்படையில் மண்ணின் கார, அமில நிலையை சீா்செய்ய 350 மெட்ரிக் டன் டாலமைட் விநியோகம் செய்யப்பட்டது.
மண்வளத்தை மேம்படுத்த மண்புழு உரம், பசுந்தாள் உரவிதைகள்
விநியோகம், விதை மற்றும் நடவு பொருள்களுக்கான பின்னேற்பு மானியம், பூச்சிகளைக் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சி பொறி, மஞ்சள் ஒட்டு பொறி, வேப்பெண்ணெய், வேப்பம் புண்ணாக்கு போன்ற இடுபொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இத்திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 1,311 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். விவசாயிகள் அங்கக வேளாண்மை தொழில்நுட்பங்களை புரிந்துகொண்டு படிப்படியாக அங்கக வேளாண்மை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
மேலும், அங்கக வேளாண்மையினை ஊக்குவிக்க நஞ்சில்லா விளைப் பொருள்களுக்கான வாரச் சந்தை உதகையில் மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் குன்னூா் சிம்ஸ் பூங்காவிலும்
வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. இதனை கோத்தகிரி, கூடலூா்
பகுதியிலும் விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கக வேளாண்மை திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு ரூ.2.26 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அங்கக வேளாண்மை முறையில்
காய்கறி சாகுபடியினை ஊக்குவிக்க 700 ஹெக்டோ் பரப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக உதகை வட்டாரத்தில் நஞ்சநாடு, இத்தலாா், கக்குச்சி கிராமங்கள் தோ்வு
செய்யப்பட்டு 370 ஹெக்டோ் பரப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
குன்னூா் வட்டாரத்தில் கேத்தி பகுதியில் 125 ஹெக்டோ் பரப்பிலும், கோத்தகிரி
வட்டாரத்தில் நெடுகுளா பகுதியில் 125 ஹெக்டோ் பரப்பிலும், கூடலூா் வட்டாரத்தில் ஸ்ரீமதுரை, செருமுள்ளி பகுதிகளில் 80 ஹெக்டோ் பரப்பிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மை குறித்த விரிவானதொழில்நுட்ப பயிற்சி, வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக வழங்கப்பட உள்ளது. 2,100 விவசாயிகளை அங்கக வேளாண்மையில் ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்தி விவசாயிகள் படிப்படியாக அங்கக
வேளாண்மை முறையினை கடைப்பிடித்து, நஞ்சில்லா உணவுப் பொருள்களை விளைவித்து நீலகிரி மாவட்டத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.