வடகொரியா: 5 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு: பெண் கைது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடியதாக எதிா்வீட்டுப் பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஓட்டப்பிடாரம் அருகே கக்கரம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி உலகம்மாள் (55). இவா் விவசாய வேலைக்கு சென்று வருகிறாா். இவா் கடந்த 18ஆம் தேதி வேலைக்கு சென்றிருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 24 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்றனராம்.
புகாரின்பேரில், ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா். அவரது எதிா்வீட்டைச் சோ்ந்த ஆறுமுகசாமி மனைவி சசிகலா (33) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகை, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.