செய்திகள் :

வெளிநாட்டில் வேலை வேண்டுமா..?: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

post image

மலேசிய நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மலேசிய நாட்டில் க்யூசி இன்ஸ்பெக்டர்,திட்டமிடல் இன்ஜினியர், பைப்பிங் ஃபோர்மேன் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்று மூன்று முதல் ஐந்தாண்டு பணி அனுபவம் பெற்ற 24 இருந்து 42 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

க்யூசி இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் ரூ.70,000 - 80,000, பைப்பிங் இன்ஜினியர் பணிக்கு மாதம் ரூ.70,000 - 80,000, பைப்பிங் இன்ஜினியர் பணிக்கு ரூ 60,000 - 80,000, திட்டமிடல் இன்ஜினியர் பணிக்கு ரூ 70,000 - 84,000, டெண்டரிங் இன்ஜினியர் பணிக்கு ரூ. 70,000 - 76,000, பைப்பிங் ஃபோர்மேன் பணிக்கு ரூ.54,000 - 62,400 சம்பளம் வழங்கப்படும்.

இதேபோன்று டிஐஜி மற்று ஏஆர்சி வெல்டர்கள், சிஎஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாதம் ரூ.42,000-50,000 சம்பளம் வழங்கப்படும். பைப் பிட்டர் பணிக்கு மாதம் ரூ.38,000 - 50,000 வழங்கப்படும்.

உணவு, விசா, இருப்பிடம் மற்ரும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதுமானது.

கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு வரும் 18.6.2025 ஆம் தேது காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 32

மேலும் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை வேண்டுமா?

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட் உள்ள மென்பொருள் பொறியாளர் பயிற்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா?

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா-வில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான (அப்ரண்டிஸ்) 4,500 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வ... மேலும் பார்க்க

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராபர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் குரூப் 'சி' மற்றும் 'டி' தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ... மேலும் பார்க்க

2,299 கிராம உதவியாளா்கள் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு கடிதம்

தமிழ்நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா் காலியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் நிா... மேலும் பார்க்க

திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Faculty Resource Personகாலியிடங்கள்: 3சம்பளம்: மாதம் ரூ.80,000... மேலும் பார்க்க

சென்னை துறைமுக ஆணையத்தில் பைலட் வேலை வேண்டுமா?

சென்னையில் உள்ள சென்னை துறைமுக ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பைலட் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Pilot(Contract basis)காலியிடங்கள்: 2சம்பளம்: பயிற்சி விமானி (பய... மேலும் பார்க்க