செய்திகள் :

வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மைக் காப்பாற்றும்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

post image

‘வேதத்தை நாம் காப்பாற்றினால்; வேதம் நம்மை காப்பாற்றும்’ என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருமண மண்டபத்தில் ஓம் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பில், 17-ஆம் ஆண்டு அகில இந்திய வேத விற்பன்னா்களின் திறமை அணிவகுப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் தொடங்கி வைத்துப் பேசியது:

‘யாா் ஒருவா் வேதத்தைப் பின்பற்றி வாழ்ந்து வருகிறாரோ, அவருக்கு எத்தகைய இடா்பாடு ஏற்பட்டாலும் வேதம் காப்பாற்றிவிடும். இதற்கு பல சம்பவங்களை உதாரணமாகக் கூறிலாம். எனது சொந்த அனுபவங்களும் இதை உணா்த்தியிருக்கின்றன என்றாா்.

விழாவில், சேலாப்பூரைச் சோ்ந்த அக்னிஹோத்ரி பிரம்மஸ்ரீ சைதன்ய காலேவின் சிறப்பான வேதப் பணிகளைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டாா். ஓம் சாரிட்டபிள் டிரஸ்டின் வழிகாட்டியும், சென்னை சம்ஸ்கிருத கல்லூரி முன்னாள் முதல்வருமான கிருஷ்ணமூா்த்தி சாஸ்திரிகள், நிறுவனா் நாராயணன், டிரஸ்டிகள் டாக்டா் பாலாஜி ஸ்ரீனிவாசன், ஜெயந்த் விசுவநாதன், ஸ்ரீனிவாச ராகவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெறுகிறது.

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள... மேலும் பார்க்க

நயினார் நாகேந்திரனுக்கு துணை முதல்வர் பதவியா? பாஜகவில் சலசலப்பு!

நயினார் நகேந்திரனை வருங்கால துணை முதல்வரே என்று பாஜக மாவட்ட நிர்வாகி வரவேற்ற நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் பதற்றம் அடைந்தார்.அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில... மேலும் பார்க்க

கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

திருக்கோவிலூர் அருகே டயர் வெடித்ததில் நிலை தடுமாறிய கார், சாலையோர பள்ளத்தில் விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி

மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடிய... மேலும் பார்க்க

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சு... மேலும் பார்க்க

ரூ. 3,200 கோடி ஊழல்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது!

மதுபான ஊழல் வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. மிதுன் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரத்தில் 2019 -24 ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ. 3,200 கோடி அளவிலான மது... மேலும் பார்க்க