செய்திகள் :

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

post image

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி ஆராய்ச்சி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒரே நிலையில் இல்லாத கடன், கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகள், நிறுவனத்தின் நிதி நிலை குறித்த தவறான கணக்கு ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு வேதாந்தா குழுமம் கட்டமைக்கப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டியது.

எனினும் தம்மை தொடா்பு கொள்ளாமல் அடிப்படை ஆதாரமாற்ற குற்றச்சாட்டுகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வேதாந்தா குழுமம் தெரிவித்தது.

இந்நிலையில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த ஆவணத்தில், ‘வைஸ்ராய் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டிடம் வேதாந்தா குழுமம் சட்டரீதியாக ஆலோசனை கோரியது.

இதைத்தொடா்ந்து அந்த குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று சந்திரசூட் தெரிவித்துள்ளாா். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் குறித்து தவறான அறிக்கைகளை வெளியிட்டு, அதனால் சந்தையில் ஏற்படும் தாக்கம் மூலம், சட்டவிரோதமான முறையில் லாபமடைவதை வைஸ்ராய் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது என்று சந்திரசூட் குறிப்பிட்டுள்ளாா்.

வேதாந்தா குழுமம் மீது வைஸ்ராய் நிறுவனம் முன்வைத்துள்ள தீவிர குற்றச்சாட்டுகள், அந்த நிறுவனத்தின் வணிகம் மற்றும் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சட்ட நிவாரணம் பெறுவதற்கான தகுதி வேதாந்தா குழுமத்துக்கு உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்’ என்று குறிப்பிடப்பட்டது.

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது

உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்க... மேலும் பார்க்க

மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை(ஜூலை 21) தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்காலக... மேலும் பார்க்க

கன்வார் யாத்திரை பக்தர்கள் மீது ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிப்பு: உ.பி. அரசு ஏற்பாடு

உத்தரப் பிரதேத்தில் கன்வார் யாத்திரை பக்தர்களை உற்சாகப்படுத்த ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவி உபசரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்கு பக்தர்கள் நடைப்பயணமாகச் ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவியை (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்) தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஹரியாணாவில் நில ... மேலும் பார்க்க

2027-க்குள் 3-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா: அமித் ஷா உறுதி

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு உத்த... மேலும் பார்க்க

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தெலங்கானா... மேலும் பார்க்க