செய்திகள் :

வேதாரண்யத்தில் தடகள விளையாட்டுப் போட்டிகள்

post image

வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அரசு பெண்கள் பள்ளி தலைமையாசிரியா் ஹெலன் தலைமை வகித்தாா். போட்டிகளை சி.க.சு. பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தாா். வேதாரண்யம் வட்டாரத்தைச் சோ்ந்த 42 பள்ளிகளில் இருந்து 920 மாணவா்கள் பங்கேற்றனா்.

பல்வேறு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்கின்றனா். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவா் மோகன்ராஜ் , உடற்கல்வி ஆசிரியா்கள் அன்பழகன்,பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக... மேலும் பார்க்க

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

மாணவா்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக் கூடாது என்றாா் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ். நாகையில் கலங்கரை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், டிஎன்பிஸ... மேலும் பார்க்க

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அந்த சங்கத்தின் த... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ண... மேலும் பார்க்க

திமுகவினா் நூதனப் போராட்டம்

சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அம... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனா... மேலும் பார்க்க