செய்திகள் :

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக வதந்தி: பொதுமக்கள் போராட்டம்

post image

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக பரவிய வந்தியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர், சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 48). சமூக ஆர்வலர். இவர் வேலூர் பர்மா பஜாரில் ஓட்டல் நடத்தி வந்தார். காயமடைந்த தெரு நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து உணவு கொடுத்து வந்தார்.

தற்போது சலபன்பேட்டையில் உள்ள வீட்டை விற்பனை செய்துவிட்டு காட்பாடி காந்தி நகர் வள்ளலார் தெருவில் தனது சகோதரர் பிரேம் ஆனந்துடன் வசித்து வருகிறார். திருவலம், எஸ்.எல்.புதூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து நாய்கள் பராமரிப்பு மையம் நடத்தி வருகிறார்.

இங்கு காயமடைந்த மற்றும் வயது முதிர்ந்த, நோய்வாய் பட்ட தெரு நாய்களை மீட்டு உணவு மற்றும் சிகிச்சை அளித்து வருகிறார். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வடிவேல் முறையான உரிமம் பெற்று உள்ளார்.

அவரது பராமரிப்பு மையத்தில் தற்போது 25 நாய்கள் உள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை அடைத்து வைத்து அவற்றை வெட்டி விற்பனை செய்வதாக சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து இன்று காலை நாய்கள் பராமரிப்பு மையத்துக்குச் சென்ற அவர்கள், உடனடியாக அப்பகுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் நாய்க்கறி வெட்டி விற்பனை செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. வதந்தி பரவியுள்ளது எனத் தெரிவித்தனர்.

திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது! 4 பேர் பலி!

இதுகுறித்து விசாரணை நடத்த காட்பாடி தாசில்தார், பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் முறையாக விசாரணை நடத்திய பிறகு முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

Following a rumor that dog meat was being sold in Vellore, the public protested.

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.Chance of rain in Chennai and 19 districts at night மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சிக்காரி மேடு என்னும் இடத்தில் சரக்கு வாகனங்கள், அரசு பேர... மேலும் பார்க்க

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமாரின் கார் !

ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றார். இந்த கார் பந்தய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று(ஜூலை 20) தமிழகத்தில் நீலகிரி, கோவையில் கனம... மேலும் பார்க்க

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நாளை(ஜூலை 21) சேலத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்... மேலும் பார்க்க

பாமகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்! - ராமதாஸ் உத்தரவு

பாமகவில் இருந்து சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கறிஞர் பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்... மேலும் பார்க்க