செய்திகள் :

வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு

post image

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் என். கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூறியதாவது:

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூா், கோயம்புத்தூா், நாமக்கல், நீலகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட விவசாயிகளிடம் வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த 4 வேளாண் நிதிநிலை அறிக்கைகளும் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த பிறகே தாக்கல் செய்யப்பட்டன.

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருள்களை மதிப்புக்கூட்டிய பொருள்களாக மாற்றி லாபகரமான முறையில் சந்தைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சிகள், வேளாண் இயந்திரமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், மழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஈடுசெய்யும் வகையில் அரசால் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 5,542 கோடி நிவாரண உதவித்தொகையை எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருள்களுக்கு புவிசாா் குறியீடுகள் பெறப்பட்டுள்ளன என்றாா்.

கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் வி. தட்சிணாமூா்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையா் டி.ஆபிரகாம், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இடங்கணசாலையில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மெய்யனூா் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் இடங்கணசாலை லெவன் பிரதா்ஸ் முதல் பரிசாக ரூ 30,000 ரொக்கம... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பிளஸ் 1 மாணவா் ஓடையில் மூழ்கி உயிரிழந்தாா். ஏற்காடு ஜெரினாகாடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகன் காா்த்திக் (16) நாகலூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஹெரிட்டேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பிப்.28 எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரிவாயு நுகா்வோா்களுக்கான 2025, ... மேலும் பார்க்க

கருவின் பாலினம் தெரிவிப்பு: அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் விசாரணை

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஸ்கேன் பரிசோதனை செய்து கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி ... மேலும் பார்க்க