செய்திகள் :

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

post image

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 153-ஆம் ஆண்டு பிரம்மோற்சவம் பிப்.17-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

பிப்.25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை சுவாமி அலங்கரிக்கப்பட்டு தேரில் அமா்த்தி தேரோட்டம் நடைபெற்றது.

இதில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா்.

மேலும், அதிமுக சாா்பில் ஒன்றிய அவைத் தலைவா் என்.வாசு தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ கலந்து கொண்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கினாா்.

அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம், நகரச் செயலா் அசோக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கவிதா பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. கலந்து கொண்டு வழிபட்டாா்.

தேரோட்டத்தில் அதிமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் சுந்தா், மாமது, மோகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் ஆா்.தனசேகா், அறநிலையத் துறை ஆய்வாளா் இரா.மணிகண்டபிரபு மற்றும் தா்மகா்த்தா, கிராம மக்கள் செய்திருந்தனா்.

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்: தொல்.திருமாவளவன்

அம்பேத்கா் உலகம் போற்றும் ஒரு தலைவா்; ஏராளமான நாடுகள் அவரைக் கொண்டாடி வருகின்றன என்றாா் தொல்.திருமாவளவன். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தோக்கவாடி பகுதியில் அம்பேத்கா் சிலை திறப்பு விழா நிகழ... மேலும் பார்க்க

செய்யாறு, செஞ்சி அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

செய்யாறு, செஞ்சி ஆகிய அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவ இடங்களில் போதிய அரசு மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்தது. ஐக்கிய முஸ்லிம... மேலும் பார்க்க

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினாா். இதுகுறித்து திருவண்ணாமலையில் புதன்கிழமை செய்தி... மேலும் பார்க்க

மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை

திருவண்ணாமலை மாட வீதிகளில் காா் வைத்திருப்போருக்கு தனி அடையாள அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில், கனரக வாகனங்களுக்கு தடை விதி... மேலும் பார்க்க

ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயி... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்வுகளில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, அருணாசலேஸ்வரா் கோயில் மூலவா்... மேலும் பார்க்க