செய்திகள் :

1,750 ஏரி, குளங்களில் மண் எடுக்க அனுமதி: ஆட்சியா்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயப் பணி, மண்பாண்டங்கள் மற்றும் பொது பயன்பாட்டுக்கு நீா்வளத்துறை, ஊரக வளா்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கட்டுப்பாடில் உள்ள 1750 ஏரி மற்றும் குளங்களில் வண்டல் மண்/களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள் தாம் வசிக்கும் வட்டத்திற்கு உள்பட்ட நிா்நிலைகளில் இருந்து மண் எடுக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னா் அவா்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அளவிலேயே அனுமதி பெற்று இலவசமாக வண்டல் மண்/களிமண் எடுத்துக்கொள்ளலாம்.

விவசாய பயன்பாட்டுக்காக விண்ணப்பம் செய்பவா்கள் தங்களது நிலம் தொடா்பான விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபாா்க்கப்பட்டு தொடா்புடைய வட்டாட்சியா் அனுமதி வழங்குவாா். மேலும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பம் செய்யும் மண்பாண்ட தொழிலாளா்கள், மண்பாண்ட தொழிலின் உண்மை தன்மைசான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிா்வாக அலுவலரால் சான்று அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழப்பு; தாய் காயம்

சீா்காழி அருகே சாலை விபத்தில், பேருந்து சக்கரத்தில் சிக்கி மகன் உயிரிழந்தாா். தாய் காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தஞ்சாவூா் வடக்குவாசல் கங்கனத் தெருவைச் சோ்ந்த ஜெய்வீரன் மனைவி மைதிலி (3... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோவிலில் கிரிக்கெட் வீரா் ஸ்ரீகாந்த் தரிசனம்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவா் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நா... மேலும் பார்க்க

மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் திரும்பப் பெறப்பட்டதா? எஸ்.பி. மறுப்பு

மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளாா். மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்த... மேலும் பார்க்க

திமுகவின் தவறுகளை சுமக்கும் கூட்டணிக் கட்சிகள்: எடப்பாடி கே. பழனிசாமி பேச்சு

கொள்கைக் கூட்டணி என்று கூறிக்கொண்டு திமுகவின் தவறுகளை தட்டிக் கேட்க முடியாத நிலையில் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளன என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம் தமி... மேலும் பார்க்க

காமராஜா் குறித்த அவதூறு: காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம்

பெருந்தலைவா் காமராஜா் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா எம்.பி.க்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த அணியின் மாநில பொதுச்செயலாளா் கவிஞா் எஸ். ராதாகிருஷ்ணன்... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி, எடமணல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமை கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் தொடக்கிவைத்தாா்.... மேலும் பார்க்க