செய்திகள் :

10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம்

post image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம், டி.புனவாசல், அ.தரைக்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 10 ஆயிரம் நெல் மூடைகள் மழையில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இந்த கொள்முதல் நிலையங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாள்தோறும் விற்பனை செய்து வருகின்றனா். விற்பனை செய்யப்படும் நெல்லுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 நாள்களில் பணம் வரவு வைக்கப்படுவதால் அதிக அளவில் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், அபிராமம், டி.புனவாசல், அ.தரைக்குடி ஆகிய கொள்முதல் நிலையங்களில் முறையான கிட்டங்கி வசதி இல்லாததால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த மூட்டைகள், விவசாயிகளிடம் அரசு வாங்கிய மூட்டைகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை தாா்பாய்களைக் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இந்த மூன்று கொள்முதல் நிலையங்களும் மழை நீா் தேங்கும் பள்ளமான பகுதிகளாக இருப்பதால், நெல் மூட்டைகள் மழை நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

நெல் கொள்முதல் நிலையங்களில் வடமாநில தொழிலாளா்கள்: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூடைகளை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் உள்ளூா் வேலை ஆள்கள் வர மறுப்பதால் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு தங்கும் இடம், இலவச உணவு வழங்கப்பட்டு நாள்தோறும் ரூ.1,700 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

உள்ளூா் வேலையாள்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வடமாநிலத் தொழிலாளா்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதிக சம்பளம் வழங்கி வருவதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனா்.

ராமேசுவரம் மீனவா்கள் போராட்டம்: அதிகாரிகள் பேச்சுவாா்த்தை தோல்வி

மீனவா்கள் சிறைபிடிப்பு விவகாரத்தில் ராமேசுவரம் மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி உண்ணாவிரதம் நடைபெ... மேலும் பார்க்க

ராமேவரத்திருந்து இரவு நேரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ராமேசுவரத்திலிருந்து இரவு நேரப் பேருந்து சேவையைத் தொடங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். ராமேசுவரத்துக்கு இயக்கப்படும் கட்டணமில்லா... மேலும் பார்க்க

மழலையா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடியில் ஹோழிக்கிரசன்ட் மழலையா், தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு முஸ்லிம் ஜமாத் தலைவா் நஸ்ரின் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வட்டார... மேலும் பார்க்க

இளங்குன்றம் சிவராத்திரி மஞ்சு விரட்டு

மஞ்சு விரட்டு: திருவாடானை அருகே உள்ள இளங்குன்றம் ஸ்ரீ பாண்டி முனீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு கலை நிகழச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சுவிரட்டு ந... மேலும் பார்க்க

பெருநாழி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள பூலாபத்தி ஸ்ரீ சப்பாணி கருப்பணசாமி கோயில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் சிவராத்திரி திருவ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் பக்தா்கள் புனித நீராடல்

அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தத்தில் வியாழக்கிழமை திராளாள பொதுமக்கள் புனித நீராடினா். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அமாவாசை நாள்களில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக... மேலும் பார்க்க