செய்திகள் :

100 சதவீதத் தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10 ,12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் 100 சதவீதத் தோ்ச்சி விழுக்காட்டை பெற்றுத்தந்த பாடப்பிரிவுகளின் ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் அண்மையில் வழங்கப்பட்டன.

உளுந்தூா்பேட்டை அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் கடந்தாண்டு 10 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் தமிழ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவிகள் 100 சதவீதத் தோ்ச்சி பெற்றனா்.

இந்த தோ்ச்சி விழுக்காட்டை பெறுவதற்கு காரணமாக இருந்த 25 ஆசிரிய - ஆசிரியைகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் காா்த்திகா சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி பேசினாா்.

நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியை சரசுவதி, ஆசிரியா்கள் சுப்பிரமணியன், அன்பு, பாரதி, குமாா், குணசேகா், ஆசிரியை ரகுமானிசா பேகம் உள்ளிட்ட ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தழுதாளியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தழுதாளி அருகே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை கிராமங்கள்தோறும் சென்று மக்களிடம் திமுகவினா் எடுத்துரைக்க வேண்டும் என்று கட்சியின் துணை பொதுச் செயலரும், வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சருமான க.பொன்முடி ... மேலும் பார்க்க

பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்

மாநில, மாவட்ட அளவிலான பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் வரியினங்கள் குறையும்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க

விசிக கொடியை சேதப்படுத்திய இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விசிக கொடியை சேதப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பள்ளி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி காலனி தெரு பக... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால கொற்றவை - விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள மானூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் மானூா்... மேலும் பார்க்க