செய்திகள் :

108 பேரிடம் ரூ.100 கோடி! டிஜிட்டல் கைது மோசடியில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

post image

நாட்டிலேயே முதல் முறையாக, சைபர் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 108 பேரிடம், இந்த கும்பல் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாவும், இதில் ஒரு பெண் உள்பட 9 பேர் மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதும், இவர்கள் நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு ரனகத் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, டிஜிட்டல் கைது செய்திருப்பதாகக் கூறி, அவரிடமிருந்து ரூ.1 கோடி மோசடி செய்தது தொடர்பான வழக்கை வசிரித்த வந்த மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்டிருக்கும் 9 பேர் மீதும், மோசடியாக ஆவணங்களைத் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு, பொருளாதார பயங்கரவாதம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்த குற்றவாளிகள் அனைவரும், தங்களுக்கு எதிராக மிக உறுதியான டிஜிட்டல் சாட்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இவர்களிடமிருந்து ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டைகள், சிம் கார்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடிப் பணத்தை நாடு முழுவதுமிருக்கும் ஏராளமான வங்கிக் கணக்குக்கு இவர்கள் பரிமாற்றம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஐந்து மாத காலம் நடைபெற்ற விசாரணையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களது மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள், தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்துவிட்டதாகவும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக நிதி மோசடிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தெலங்கானா... மேலும் பார்க்க

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 8 புதிய மசோதாக்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை... மேலும் பார்க்க

ரயில்வே விற்பனையாளா்களுக்கு ஒரே மாதிரியான அடையாள அட்டைகள்!

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சட்டவிரோதமான விற்பனையைத் தடுக்க, அனைத்து விற்பனையாளா்களுக்கும் ஒரே மாதிரியான அடையாள அட்டைகளை வழங்க ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பயணிகளுக்குத் தரமான உணவுப் பொர... மேலும் பார்க்க

பஞ்சாப்: ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜிநாமா

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அவா் தெரிவித்தாா். 35 வயதா... மேலும் பார்க்க