செய்திகள் :

15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!

post image

டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கு 15 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்கியுள்ளது.

முன்னதாக டாடா ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் காருக்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரு மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் எலக்ட்ரிக் மாடல் கார் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டாடா எலக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 8 ஆண்டுகள் அல்லது ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் பயணத்துக்கு பேட்டரி வாரண்டி வழங்கப்பட்டு வந்தது.

தற்போது வாகனம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு எவ்வளவு கிலோ மீட்டர் ஓட்டினாலும் பேட்டரிக்கு வாரண்டி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வணிகத்துக்கு பயன்படுத்தினாலோ, டாடாவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டாலோ இந்த சலுகை ரத்து செய்யப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டாடா நிறுவனத்தின் கார்களை ஏற்கெனவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் எலக்ட்ரிக் கார்களை வாங்கினால் கூடுதலாக ரூ. 50,000 தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்சான் 45 இவி காரின் ஆரம்ப விலை ரூ. 13.99 லட்சம், கர்வ் இவி ஆரம்ப விலை ரூ. 17.49 லட்சம் ஆகும்.

Tata Nexon 45 and Curve model electric cars are offered with a 15-year battery warranty.

இதையும் படிக்க : மீண்டும் விற்பனைக்கு வரும் கைனடிக் ஹோண்டா டிஎக்ஸ்! இந்த முறை எலக்ட்ரிக்...

2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!

புதுதில்லி: 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வெறும் கவனத்தை ஈர்ப்பதை விட அதிகமான டெக் செயல்திறன் உள்ளடக்கியது. தினசரி பயன்பாடு, நீண்ட பயணங்கள் மற்றும் மாறிவரும் சாலை நிலைமைகளை எ... மேலும் பார்க்க

ஜூனில் வீழ்ச்சியடைந்த தங்கம் விற்பனை

தங்கத்தின் அதிக மற்றும் ஏற்ற இறக்கமான விலைகள் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் அதன் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இது, கரோனா நெருக்கடிக்குப் பிறகு தங்கம் விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகும... மேலும் பார்க்க

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,351 கோடியாக உயா்வு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவின் செயல்பாட்டு வருவாய் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ரூ.13,351 கோடியாக அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வ... மேலும் பார்க்க

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

புதுதில்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 78 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்க... மேலும் பார்க்க

விப்ரோ: முதல் காலாண்டு வருவாய் 3% அதிகரிப்பு!

புதுதில்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.8 சதவிகிதம் அதிகரித்ததையடுத்து, ஐடி சேவை நிறுவனமான விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் இன்று உயர்ந்து முட... மேலும் பார்க்க

பந்தன் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் சரிவு!

கொல்கத்தா: தனியார் துறை கடன் வழங்குநரான பந்தன் வங்கி, வளர்ந்து வரும் தொழில்முனைவோர் வணிகத்தின் மீதான அழுத்தம், காரணமாக 2025-26 முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் குறைத்துள்ளதாக நுண்நிதி வங்கியான பந்தன் ... மேலும் பார்க்க