செய்திகள் :

15 வயது சிறுமியை தீ வைத்து கொல்ல முயற்சி: ஒடிசாவில் அதிர்ச்சி!

post image

ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுமி ஆபத்தான நிலையில் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்குப் பொறுப்பான துணை முதல்வர் பிரவதி பரிதா, இந்த சம்பவத்தை எக்ஸ் தளத்தில் உறுதி செய்துள்ளார். புரி மாவட்டத்தில் உள்ள பலங்காவில் மர்ம நபர்கள் சிலர் சாலையில் நடந்துசென்ற 15 வயது சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த செய்தியைக் கேட்டு வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

சிறுமி புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார், அவருக்குத் தீவிர சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

பயாபர் கிராமத்தில் சிறுமி தோழியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மூர்ம மர்ம நபர்கள் சிறுமியை தீ வைத்து எரித்ததாகவும், சம்பவத்திற்குப் பிறகு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸாரிடம் விளக்கினர்.

போலீஸார் சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் வீட்டில் திருட்டு !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வீட்டில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கே... மேலும் பார்க்க

"மேக் இன் இந்தியா" என்ற பெயரில் ஒன்றுகூடுகிறோமே தவிர உற்பத்தி செய்யவில்லை: ராகுல்

இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள் ஆனால் அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறினார். இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில... மேலும் பார்க்க

மதசார்பற்ற சக்திகளை ராகுல் ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது: ஜான் பிரிட்டாஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஒரே நோக்கம் மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, குழப்பத்தையும் பிரிவினையையும் உருவாக்கக்கூடாது என்று சிபிஐ(எம்) தலைவர் ஜான் பிரிட்... மேலும் பார்க்க

24-வது முறையாக டிரம்ப் பேச்சு! கூட்டத்தொடரில் மோடி பதிலளிக்க வேண்டும்! - காங்கிரஸ்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24-வது முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதற்கு, வரும் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜ... மேலும் பார்க்க

உ.பி.யில் கொட்டித்தீர்த்த கனமழை: ஒரேநாளில் 18 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்த கனமழைக்கு இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருவதால் பாதிப்பும்,... மேலும் பார்க்க

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் விபு பக்ரு!

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபு பக்ரு சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி... மேலும் பார்க்க