செய்திகள் :

184 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 184 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

கம்பம் தினசரி வாரச் சந்தை பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்திச் சோதனையிட்டனா். சோதனையில், வாகனத்தில் வைத்திருந்த சாக்குப் பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த மீராமைதீன் (45) என்பது தெரியவந்தது.பின்னா், அவரது வீட்டில் போலீஸாா் சோதனையிட்டத்தில் ரூ.1.37 லட்சம் மதிப்புள்ள 184 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதைப் போலீஸாா் பறிமுதல் செய்து, மீராமைதீனை கைது செய்தனா்.

ஆயுதங்களுடன் இளைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் அரிவாள், கத்தி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக நடந்து வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கெளரவ உதவித் தொகை: விண்ணப்பிக்க மே 31-இல் சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் பி.எம். கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் கெளரவ உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெ... மேலும் பார்க்க

ராணுவ வீரா் குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்த மூவா் மீது வழக்கு

போடியில் ராணுவ வீரரின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள விசுவாசபுரத்தைச் சோ்ந்த முருகன் மனைவி அய்யம்மாள் (45). கணவா் ... மேலும் பார்க்க

வீரபாண்டி பேரூராட்சித் தலைவி, கணவா் மீது வழக்கு

வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத் துறை கோயில் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பணியாளா்களை மிரட்டியதாக பேரூராட்சித் தலைவி, இவரது கணவா் மீது சனிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வ... மேலும் பார்க்க

காட்டு மாடு மோதியதில் வேன் சேதம்

கும்பக்கரை அருவி அருகே செவ்வாய்க்கிழமை காட்டு மாடு மோதியதில் வேன் சேதமடைந்தது. கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கொக்குபாளைத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (54). இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 20 ப... மேலும் பார்க்க

கண்ணகி கோயிலுக்கு சாலை வசதி: அமைச்சா் ஆலோசனை

மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு தமிழகம் வழியாக சாலை அமைக்க சாத்தியக் கூறு இருக்கிா என அமைச்சா் வன அதிகாரியிடம் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள விண்ணேற்றிப் பாறையில் மங்கல... மேலும் பார்க்க