செய்திகள் :

1989-ல் கடத்தல்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை கைது செய்த சிபிஐ! - கடத்தப்பட்டது யார் தெரியுமா?

post image

ஜம்மு காஷ்மீரில் 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் முஃப்தி முகமது சயீத். அவரின் மகள் ருபையா சயீத். அவர் லால் சௌக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து நவ்கானில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டார். அப்போது இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, “ருபையா சயீத் விடுவிக்கப்பட வேண்டுமானால், சிறையில் இருக்கும் 'ஜம்மு–காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF)' அமைப்பைச் சேர்ந்த 5 கைதிகளை விடுவிக்க வேண்டும்” என நிபந்தனை விதிக்கப்பட்டது.

ருபையா சயீத்
ருபையா சயீத்

இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, JKLF அமைப்பின் ஐந்து கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. மத்திய அரசின் இந்த முடிவை அப்போது ஜம்மு–காஷ்மீரின் முதல்வராக இருந்த ஃபரூக் அப்துல்லா கடுமையாக எதிர்த்தார்.

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் JKLF அமைப்பைச் சேர்ந்த யாசின் மாலிக் தலைமையிலான குழுவே எனக் கண்டறியப்பட்டது. தற்பொழுது யாசின் மாலிக், பயங்கரவாத நிதி பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

CBI
சி.பி.ஐ

மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட JKLF அமைப்பின் ஐந்து கைதிகளும், 1999-ம் ஆண்டு கந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814-ஐ கடத்தலில் பங்கேற்றனர் என்பதும் ஒரு வேறு கதை.

இந்த நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), ருபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் நேற்று ஷஃபாத் அகமது ஷுங்லூ என்பவரை கைது செய்துள்ளது. சாட்சியங்கள் மற்றும் ருபையாவின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தற்போது ஜம்முவில் உள்ள TADA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

`SIR தொடர்பான APK ஃபைல் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம்’ - சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

`சைபர்’ குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த வகை குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், சைபர் குற்றவாளிகள் நாட்டில் நடக்கும் அன்றாட... மேலும் பார்க்க

``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்பட்ட பெண் வேதனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் காதல் திருமணம் செய்து கொள்ள இருந்த அச்சல் (20) என்ற பெண்ணின் காதலனை அவரது உறவினர்கள் படுகொலை செய்தனர். இதையடுத்து தனது காதலன் உடல் முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து க... மேலும் பார்க்க

விமானத்துக்கு `மனித வெடிகுண்டு' மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட இண்டிகோ விமானம்

குவைத்திலிருந்து தெலுங்கானா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.குவைத்திலிருந்து இண்டிகோவின் ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1... மேலும் பார்க்க

வேலூர்: மின்வேலியில் சிக்கி தந்தை, 2 மகன்கள் பலி - கிராமத்தையே உலுக்கிய துயரம்

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள ராமநாயிணி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் ( 55). விவசாயி. இவரின் மனைவி மல்லிகா. இவர்களுக்கு விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என்று மூன்று மகன்கள். ஜ... மேலும் பார்க்க

US: `டவுன் சென்டர் மாலில் துப்பாக்கிச் சூடா?' - காவல்துறை சொல்வது என்ன?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் பகுதியில் உள்ளது டவுன் சென்டர் மால். இந்த மாலில் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 29-ம் தேதி) துப்பாக்கிச் சூடு நடந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனால் ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய ... மேலும் பார்க்க