செய்திகள் :

2-வது ஒருநாள்: இங்கிலாந்துக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் திடலில் இன்று (ஜூலை 19) நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தாமதமாக தொடங்கியது. ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட் செய்தது.

இந்தியா - 143/8

இந்திய அணிக்கு தொடக்கமே சரியாக அமையவில்லை. தொடக்க வீராங்கனை பிரதீகா ராவல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாடி ரன்கள் குவிக்க, மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. ஹர்லீன் தியோல் (16 ரன்கள்), கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் (7 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3 ரன்கள்), ரிச்சா கோஷ் (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 51 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். தீப்தி சர்மா 30* ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 29 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். எம் அர்லாட் மற்றும் லின்ஸி ஸ்மித் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சார்லோட்டி டீன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

Batting first in the second ODI against England, the Indian team scored 143 runs for the loss of 8 wickets.

இதையும் படிக்க: டி20 கிரிக்கெட்டில் இதுவே என்னுடைய பெருமைமிகு தருணம்; மனம் திறந்த ஆண்ட்ரே ரஸல்!

டி20 கிரிக்கெட்டில் இதுவே என்னுடைய பெருமைமிகு தருணம்; மனம் திறந்த ஆண்ட்ரே ரஸல்!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய பெருமைமிகு தருணத்தை மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் பகிர்ந்துள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரஸல், சர்வதேச டி20 கிரிக்கெட... மேலும் பார்க்க

கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவதற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் ஜோ ரூட்!

இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணித்து வருகிறார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியி... மேலும் பார்க்க