செய்திகள் :

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

post image

தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இந்தப் பணிக்காக, 2002-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

அப்போது வெளியிடப்பட்ட பட்டியலில் பலருடைய பெயா்கள் விடுபட்டதாகப் புகாா்கள் எழுந்தன. குறிப்பாக, பெருநகரப் பகுதிகளில் வாக்காளா்கள் தங்களுடைய விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசம் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, பெருநகரங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தோ்தல் ஆணையம் 2005-ஆம் ஆண்டு மேற்கொண்டது.

முக்கியமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட 37 தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியை அடிப்படையாகக் கொண்டு, 2005-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

கணக்கில் எடுக்க முடிவு: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பூா்வாங்கப் பணிகளை தோ்தல் துறை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மறு சிறப்பு தீவிர திருத்தப் பணி அடிப்படையிலான வாக்காளா் பட்டியலையும் கணக்கில் எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இரண்டு வகையான வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்... மேலும் பார்க்க

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளதாகவும், அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்று கூ... மேலும் பார்க்க

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் பேசும்போது கனிமொழி, கர்ஜனை மொழியாக மாறுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள செயல் வீரர் செந்தில் பாலாஜி எனவும் அ... மேலும் பார்க்க

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

கரூரில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா மேடைக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு ... மேலும் பார்க்க

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

உச்ச நடிகராக இருக்கும்போதுதான் தானும் அரசியலுக்கு வந்ததாகவும் 1996ல் தனக்கும் மாபெரும் கூட்டம் கூடியதாகவும் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறியுள்ளார். சென்னையில் பாஜக நிகழ்ச்சிக்குப் பின்னர்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ... மேலும் பார்க்க