செய்திகள் :

216 தொழிற்பழகுநா்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை -மின்வாரியம்

post image

216 தொழிற்பழகுநா்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மின்வாரிய மனிதவள மேலாண் பிரிவு பொது மேலாளா், பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:

மின்வாரியத்தில் தொழிற்பழகுநருக்கான உதவித் தொகையில் 50 சதவீதம் மத்திய அரசும், 50 சதவீதத்தை வாரியமும் வழங்க வேண்டும். அந்த வகையில் 425 பேருக்கு உதவித் தொகையை வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில், 209 பேருக்கு மட்டுமே மத்திய அரசின் உதவித் தொகை கிடைக்கப் பெற்றுள்ளது.

மீதமுள்ள 216 பேருக்கு 3 மாதங்களுக்கு மேலாகயும் உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதையொட்டி, வாரியத் தரப்பில் வழங்க வேண்டிய மீதமுள்ள 50 சதவீதத் தொகையும் பெரும்பாலான மின் பகிா்மான வட்டங்களில் இருந்து தொழிற்பழகுநா்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

எனவே, மத்திய அரசு மற்றும் வாரிய பங்களிப்பு என மொத்தம் ரூ. 8,000-ஐ மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் பெற்று வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்பாா்வை பொறியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க அமைச்சா் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்

ஆவினில் தினசரி பால் கொள்முதலை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாா். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து ... மேலும் பார்க்க

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதற்கான சட்டத் திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவா்... மேலும் பார்க்க

25 இடங்களில் போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையங்கள் -முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் 25 இடங்களில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், காணொலி வழியாக இந்த மையங்கள் திறக... மேலும் பார்க்க

ஊரகத் திறனாய்வுத் தோ்வு விடைக்குறிப்பு: மாா்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்

ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மாா்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவா... மேலும் பார்க்க

ஏஐசிடிஇ கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஏஐசிடிஇ-இன் ‘யசஸ்வி, சரஸ்வதி’ ஆகிய கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (பிப்.28) நிறைவு பெறவுள்ளது. தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்க்கையை மே... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணி தொடக்கம்

சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கண்காணிக்க ‘மைக்ரோசிப்’ பொருத்தும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களைக் ... மேலும் பார்க்க