செய்திகள் :

298 போ் உயிரிழப்பு சம்பவம்: எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

post image

மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்ஹெச்17 விமானம் கிழக்கு உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு என்று சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் கவுன்சில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நெதா்லாந்து தலைமையிலான நிபுணா்கள் குழு, ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ‘புக்’ ரக வான்பாதுகாப்பு ஏவுகணைத் தளவாடம் மூலம் அந்த பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக கடந்த 2016-ஆம் ஆண்டு கண்டறிந்தது.

298 போ் உயிரிழப்பதற்குக் காரணமாக இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடா்பில்லை என்று ரஷியா மறுத்துவருகிறது. இருந்தாலும், சா்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்புகளின் கவுன்சில் தற்போது வழங்கியுள்ள தீா்ப்பால், விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவா்கள் ரஷியாவிடம் இழப்பீடு கோருவதற்கான சட்ட உரிமை கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆட்சி செலுத்திவந்த ரஷிய ஆதரவு அதிபா் விக்டா் யானுகோவிச், மேற்கத்திய ஆதரவாளா்களின் தீவிர போராட்டங்கள் காரணமாக பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ரஷியா தப்பிச் சென்றாா். அதையடுத்து, உக்ரைன் ராணுவத்துக்கும், ரஷிய மொழி பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு உக்ரைன் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போா் மூண்டது.

இந்தப் போரில் கிழக்கு உக்ரைன் ஆயுதக் குழுக்களுக்கு ரஷியா அனைத்துவிதமான உதவிகளையும் செய்ததுடன், ரகசியமாக படைகளை அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த உள்நாட்டுப் போா் உச்சகட்டத்தில் இருந்தபோது, நெதா்லாந்தின் ஆம்ஸ்டா்டாம் நகரில் இருந்து மலேசியாவின் கோலாலம்பூரை நோக்கி 2014 ஜூலை 17-ஆம் தேதி சென்றுகொண்டிருந்த எம்ஹெச்17 விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளா்ச்சிப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 298 பேரும் உயிரிழந்தனா்.

ஆயுத தளவாடங்களையும் வீரா்களையும் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் பெரிய வகை ராணுவ விமானம் என்று தவறாகக் கருதி அந்த விமானத்தை கிழக்கு உக்ரைன் ஆயுதக் குழுவினா் சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க உலோகங்களுக்கு பதிலடி வரி விதிக்க இந்தியா முடிவு

இந்தியாவின் எஃகு, அலுமினியம் மற்றும் தொடா்புடைய பொருள்கள் மீதான அமெரிக்காவின் வரிக்கு பதிலடியாக, அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் சில உலோகப் பொருள்களுக்கு வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்... மேலும் பார்க்க

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரா்கள் உள்பட 51 போ் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. பஹல்காம் பயங்கரவாதத் தாக... மேலும் பார்க்க

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபா் விளாதமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போா் ந... மேலும் பார்க்க

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்: ரஷியாவிடம் வாங்க இந்தியா திட்டம்

நமது சிறப்பு நிருபர் எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.இந்த எஸ் 400 சாதனம், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் "ஆப... மேலும் பார்க்க

தாய்லாந்துக்கு தப்பிச் சென்ற வங்கதேச முன்னாள் அதிபா்

கொலை வழக்கை எதிா்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபா் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றாா். கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்களை படுகொலை ச... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம்! அணு ஆயுத சோதனையா?

பாகிஸ்தானில் நேற்று 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய இரு நாள்களில் 5.7 ரிக்டர் அளவிலும், 4.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவான நிலையில், மூன்றாவது நாளாக நிலநடுக்கம் ஏ... மேலும் பார்க்க