செய்திகள் :

3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு ஜூலை 27-இல் எழுத்துத் தோ்வு!

post image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்துள்ள 22,000-க்கும் மேற்பட்டோருக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 27-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 8 கோட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2015-க்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படாத நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னா், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலிப் 5 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

அதேவேளை கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு நியமனம் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்ணப்பங்கள் வரவேற்பு

இதன் தொடா்ச்சியாக மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்கள், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318, விழுப்புரம் கோட்டத்தில் 322, கும்பகோணம் கோட்டத்தில் 756, சேலம் கோட்டத்தில் 486, கோவை கோட்டத்தில் 344, மதுரை கோட்டத்தில் 322, திருநெல்வேலி கோட்டத்தில் 362 பணியிடங்க என 3,274 ஓட்டுநா்,நடத்துநா் பணியிடங்களுக்கு கடந்த மாா்ச் மாதம் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த ஏப். 21-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

எழுத்துத் தேர்வு

மேற்கண்ட பணியிடங்களுக்கு 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பதாரா்களுக்கு ஜூலை 27-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள்

தேர்வுக்கான வினாத்தாளை கடந்த முறையை போலவே அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.

தேர்வு மையம்

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

நுழைவுச்சீட் பதிவிறக்கம்

இதற்கான நுழைவுச்சீட்டை ஜூலை 21 முதல் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

645 குரூப் 2, 2ஏ பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Written Examination for the recruitment of 3274 Driver cum Conductor post in Eight STUs will be conducted on 27.07.2025 at the 15 identified places in Tamilnadu by Anna University, Chennai

இந்தியன் ரயில்வேயில் 6,235 டெக்னீசியன் பணியிடங்கள்: ஆர்ஆர்பி அறிவிப்பு

இந்தியன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 6,235 டெக்னிசியன் கிரேடு-I மற்றும் கிரேடு-III காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் ... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 28 உதவி மேலாளர், சட்ட அலுவலர்,மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந... மேலும் பார்க்க

645 குரூப் 2, 2ஏ பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இளநிலை வேலை வாய்ப்பு அலுவலா், வனவா், மேற்பார்வையாளர், இளநிலைக் காப்பாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளா், உதவியாளா் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்று... மேலும் பார்க்க

துறைமுக கழகத்தில் மேலாளர், அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியன் துறைமுக கழகத்தில் காலியாகவுள்ள மேலாளர், அலுவலர் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்.: 2025/SGR/09பணி: Accounts Officer, Grade - Iகாலியிடங்கள் ... மேலும் பார்க்க

1,996 முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: டிஆா்பி அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத் தோ்வு செப்.28-ஆம் தேதி முத... மேலும் பார்க்க

1,340 இளநிலை பொறியாளா் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 21 வரை அவகாசம்: எஸ்எஸ்சி

சென்னை: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (எஸ். எஸ்.சி.... மேலும் பார்க்க