செய்திகள் :

40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகம் முற்றுகை

post image

விழுப்புரம்: தாங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, அரியலூா் திருக்கை கிராம மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது, கெடாா் அருகிலுள்ள அரியலூா் திருக்கை கிராமத்திலுள்ள மேட்டுத்தெரு, பிள்ளையாா் கோவில் தெரு, பள்ளிக்கூடத் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆட்சியரகத்துக்கு வந்து, அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், உடனடியாக பொதுமக்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் அரியலூா் திருக்கை கிராம மக்கள் கூறியிருப்பது:

சுமாா் 43 குடும்பங்கள் அரியலூா் திருக்கை கிராமத்தில் வீடுகளைக் கட்டி வசித்து வருகிறோம். ஊராட்சி அலுவலகத்தில் ஆண்டுதோறும் வீட்டுவரி செலுத்தி வருவதோடு, மின்வாரியம் மூலம் வீட்டு மின் இணைப்பு பெற்று, அதற்கான கட்டணத்தையும் செலுத்தி வருகிறோம்.

மேலும் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட அட்டை போன்றவற்றை பெற்றுள்ளோம். இந்த நிலையில், நாங்கள் குடியிருக்கும் இடத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறாா்.

எனவே, சம்பந்தப்பட்ட பகுதியை கள ஆய்வு செய்து, 40 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனா். இதை பெற்றுக்கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

8.45 லட்சம் பேருக்கு குடற்புழுநீக்க மாத்திரைகள்: ஆட்சியா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மகாராஜபுரத்திலுள்ள அங்கன்வாடி ம... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் ரூ.29 லட்சத்தில் நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்திலான நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் த... மேலும் பார்க்க

செஞ்சி-வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய பேருந்து சேவை

செஞ்சி: செஞ்சியில் இருந்து வேட்டைக்காரன்குடிசை கிராமம் வழியாக வெள்ளிமேடு பேட்டைக்கு புதிய அரசுப் பேருந்து சேவையை தொகுதி எம்எல்ஏ செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். செஞ்சி பேருந்து நில... மேலும் பார்க்க

மின் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருத்தாசலத்தை அடுத்துள்ள சாத்தப்பாடி கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (5... மேலும் பார்க்க

இளைஞா்கள் இருவா் தற்கொலை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இளைஞா்கள் இருவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூ... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டங்கள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா், மேல்மலையனூா் வட்டாரங்களில் 2025 - 26 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்... மேலும் பார்க்க