செய்திகள் :

5 வயது சிறுவனை தூக்கி சென்று கொன்ற சிறுத்தை - வால்பாறையில் சோகம்

post image

கோவை மாவட்டத்தில் மனித–வனவிலங்கு மோதல் பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதிலும் வால்பாறை மலைப் பகுதியில் யானை, புலி, காட்டு மாடு, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

வால்பாறை
வால்பாறை

வால்பாறையில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வனவிலங்கு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது புலம்பெயர் தொழிலாளர்கள்தான்.

கடந்த சில ஆண்டுகளில் அந்த தொழிலாளர்களின் குழந்தைகளை சிறுத்தை தாக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், வால்பாறை ஐயர்பாடி தேயிலைத் தோட்டத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஜாவெல்லி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

 சிறுத்தை
சிறுத்தை

அவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று (06.12.2025) குழந்தைகள் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பெற்றோர் வீட்டிற்குள் இருந்தனர்.

அப்போது அங்கு திடீரென வந்த ஒரு சிறுத்தை, சைஃபுல் ஆலம் என்ற 5 வயது சிறுவனை தூக்கிச் சென்றது. சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

உயிரிழந்த சிறுவன்
உயிரிழந்த சிறுவன்

சிறுவனின் உடல் தேயிலைத் தோட்ட புதரில் சடலமாக மீட்கப்பட்டது. உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் வால்பாறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

”திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ் விஜயன் வீட்டில் கொள்ளை”- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன். இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக-வில் விவசாய அணியின் மாநில செயலாளராகவும் பதவி வகிக்கிறார். தஞ்சாவூர் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராகவும் ... மேலும் பார்க்க

ஓ.என்.ஜி.சி சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கு - பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இவர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடு... மேலும் பார்க்க

திமுக: `கட்சிக்காகதான் பொறுமையா இருந்தேன்’ - நகராட்சி துணை தலைவர் மீது சாதிய வன்கொடுமை புகார்

நீலகிரி மாவட்டத்தின்‌ பேரூராட்சிகளில் ஒன்றாக இருந்த‌ கோத்தகிரி பேரூராட்சி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட கோத்தகிரி நகராட்சியின் தலைவராக தி.மு.க- வைச் சேர்ந்த ஜெயகும... மேலும் பார்க்க

சங்கரன்கோவில்: மாற்றுத்திறனாளி விவசாயி படுகொலை; மனைவி படுகாயம் - நிலத்தகராறு காரணமா?

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், மாற்றுத்திறனாளி விவசாயி. இவரின் மனைவி சுப்புத்தாய். நேற்று இரவு இவ்விருவரும் கரிவளம் பகுதியில் ... மேலும் பார்க்க

சபரிமலை: `தங்கம் கொள்ளை வழக்கில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா?' - அமலாக்கத்துறை விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளை வழக்கில் உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆபீசர் சுதீஸ... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த ... மேலும் பார்க்க