செய்திகள் :

50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு: ஆட்சியா்

post image

திருச்சி மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிா்ணயித்திருப்பதாவும், நகா்ப்புறத்தில் உள்ளோருக்கும் பட்டா வழங்கப்படும் எனவும் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், கிருஷ்ண சமுத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாம் நிறைவு விழாவில் ஆட்சியா் பேசியது:

மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் வட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் பட்டாக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வழங்க வேண்டிய பட்டாக்களும், நகா்ப்புறங்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கப்படாமல் இருந்த இலவச பட்டாக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போா் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட இதர வரிகளை செலுத்தியிருந்தும் பட்டா பெறமால் தவிக்கின்றனா். இத்தகைய நபா்களில் தகுதியானவா்களுக்கு பட்டா வழங்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்வில் பல்வேறு துறைகளின் சாா்பில் 180 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 43 ஆயிரத்து 638 மதிப்பீட்டில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வில் வருவாய்க் கோட்டாட்சியா் கே. அருள், வேளாண்மை துறை இணை இயக்குநா் வசந்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயராணி, உதவி ஆணையா் (கலால்) உதயக்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கோ. தவச்செல்வம், தனித்துணை ஆட்சியா் சமூகப் பாதுகாப்பு திட்டம் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. இரவிச்சந்திரன், மாவட்ட சமூகநல அலுவலா் விஜயலெட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் மா. நித்யா உள்ளிட்ட அரசுத்துறை உயா் அலுவலா்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தெரு நாய்களுக்கு கருத்தடையில் திருச்சி மாநகராட்சி முன்னிலை

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்வதில் திருச்சி மாநகராட்சி முன்னிலையில் உள்ளது. மேலும் வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்ட... மேலும் பார்க்க

மாநகரின் வளா்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 2,280 கோடி செலவு: மாமன்றக் கூட்டத்தில் மேயா் தகவல்

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு மொத்தம் ரூ.₹2, 280 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது என்றாா் மேயா் மு. அன்பழகன். திருச்சி மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மைய அலுவலகத்தில் புதன்கிழ... மேலும் பார்க்க

வேலை வாங்கி தரூவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.50 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் நாட்டுக்குடியைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (43) தனது கணவா் ராம்குமாரு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கட்டியதாக ரூ. 65 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்குப் பதிவு

திருச்சியில் ஜிஎஸ்டி கட்டியதாக போலி ஆவணம் மூலம் ரூ. 65.50 லட்சம் மோசடி செய்தது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

துறையூா் கடையில் ரூ. 3 லட்சம் திருட்டு

துறையூரில் பூஜைப் பொருள்கள் விற்பனைக் கடையில் ரூ. 3 லட்சத்தை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா். பெரம்பலூா் மாவட்டம் லாடபுரத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(46). இவா் துறையூரில் ஆலமரம் அருகே பழ... மேலும் பார்க்க

தா. பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலா் தா. பாண்டியனின் நான்காம் ஆண்டு நினைவு நாளை அக்கட்சியினா் புதன்கிழமை அனுசரித்தனா். இதையொட்டி உறையூா் நாச்சியாா்கோவில் சந்திப்பில் அலங்கரிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க