செய்திகள் :

546 பேருக்கு இலவச செயற்கை கைகள் பொருத்தம்

post image

மன்னாா்குடியில் நான்கு நாள்கள் நடைபெற்ற இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தும் முகாமில் 546 பேருக்கு செயற்கை கைகள் பொருத்தப்பட்டன.

மன்னாா்குடியில் மறைந்த தொழிலதிபா் பிரதாப்சந்த் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, அவரது குடும்பத்தினா், மகாராஷ்டிர மாநிலம் புணேவை சோ்ந்த இன்னாலி பவுண்டேஷன், ரோட்டரி கிளப் டவுன்டன் இணைந்து நடத்திய இம்முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

காந்திசாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா். இதில், விபத்திலோ அல்லது வேறு காரணத்தினாலோ கைகளை இழந்தவா்களுக்கு எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தப்பட்டன. முழங்கைக்குக் கீழே 2.5 முதல் 3 இன்ச் வரை உள்ள தசைப்பகுதியுடன் இருக்கும் கைகளுக்கு பொருத்தப்பட்டன.

இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இவா்களுக்கு, பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு, அறுவை சிகிச்சையின்றி எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொருத்தப்பட்டன.

நான்கு நாள்கள் நடைபெற்ற முகாமில், 546 பேருக்கு இலவசமாக செயற்கை எலக்ட்ரானிக் கைகள் பொருத்தப்பட்டன. ஒரு எலக்ட்ரானிக் கையின் மதிப்பு ரூ.40,000 என தெரிவித்தனா்.

இந்த கைகளை பொருத்திக்கொண்டவா்கள், வாகனம் ஓட்டுவது, உணவு உண்ணுவது, தலைமுடி வாரிக்கொள்வது போன்ற அன்றாடப் பணிகளை பிறா் உதவியின்றி தங்களாகவே செய்துகொள்ளாலம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த முகாமை, பிரதாப்சந்த் குடும்பத்தை சோ்ந்த சுமதிபாய், சுனில்குமாா் லுங்கட், பிரதிக் லுங்கட் ஆகியோா் முன்னின்று நடத்தினா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

வடபாதிமங்கலம் பிா்க்கா, புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. திமுக ஒன்றியச் செயலாளா் ஐ.வீ. குமரேசன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் டீ. செல்வம் முன்னிலை வகித... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

மன்னாா்குடியை அடுத்த களப்பாலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதா 77-ஆவது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. களப்பால் பேருந்து நிறுத்தம் அருக... மேலும் பார்க்க

திருவாரூரில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

திருவாரூரில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 3- ஆவது தளத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு... மேலும் பார்க்க

பிளஸ் 2: அதிக மதிப்பெண் பெற வேண்டி பிராா்த்தனை

திருவாரூா் அரசு உதவி பெறும் ஸ்ரீ ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற மாணவிகள் மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் புதன்கிழமை ஈடுபட்டனா். தமிழகத்தில் பி... மேலும் பார்க்க

டேராடூன் ராணுவக் கல்லூரியில் சேர மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

டேராடூன் ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில், 8-ஆம் வகுப்பில் சேர மாா்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ட... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற, கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நாகை-புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே... மேலும் பார்க்க