செய்திகள் :

``AC ரூம் கூட கொடுக்கமாட்டாங்க!'' -இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா

post image

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று நவி மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஒரு காலத்தில் இந்திய பெண்கள் எந்த நிலையில் இருந்ததென சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

India vs South Africa
India Vs South Africa

இந்திய அணி இதற்கு முன்பு 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இதில் 2005 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் அஞ்சும் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சும் சோப்ரா பேசியதாவது, '2005 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்காவில் ஆடியிருந்தோம். 2002 இல் நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றிருந்தோம். அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் வென்றிருந்தோம். அதனால் எங்களுக்கு அந்த பிட்ச்களை பற்றி கொஞ்சம் தெரியும்.

அந்த உலகக்கோப்பையில் எங்களின் மனநிலை வேறாக இருந்தது. அப்போது எங்களுக்கு இறுதிப்போட்டியை வெல்ல வேண்டும் எண்ணமோ தீர்க்கமோ இல்லை. ஏனெனில், அதுவரை நாங்கள் இறுதிப்போட்டிக்கெல்லாம் சென்றதே இல்லை. ஒரு இறுதிப்போட்டி எப்படியிருக்கும் என்றே தெரியாது. அரையிறுதியில் நியூசிலாந்தை வென்ற போது எங்களுக்கு அந்த வெற்றியை எப்படி கொண்டாட வேண்டும் என்று கூட தெரியவில்லை.

Anjum Chopra
Anjum Chopra

பெரிதாக கொண்டாடக்கூட இல்லை. அப்படியே ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். இன்னொன்றை சொல்லவா? நாங்கள் இறுதிப்போட்டிக்கு செல்லும் வரை ஒரு அறைக்கு மூன்று பேர் என எங்களுக்கு Non AC அறைகளைத்தான் கொடுத்திருந்தார்கள். இறுதிப்போட்டிக்கு சென்ற பிறகுதான் எங்களுக்கு நல்ல விசாலமான AC அறைகளை கொடுத்தார்கள். இப்போது பெண்கள் கிரிக்கெட் நிறையவே மாறிவிட்டது.' என்றார்.

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க

Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டி... மேலும் பார்க்க