செய்திகள் :

Ajith Kumar: "20 வருடங்களுக்கு முன் என்னைச் சந்தித்திருந்தால், என்னை வெறுத்திருப்பீர்கள்" - அஜித்

post image

நடிகர் அஜித் குமார் சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்குக் கொடுத்த நேர்காணலில் அவர் உதவியாளர்கள் இல்லாமல் எளிமையாக தனது வேலைகளைத் தானே செய்துகொள்வது ஏன் என்பதை விளக்கி பேசியுள்ளார்.

Ajith Kumar பேசியதாவது:

"நான் மிகவும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தேன். எனக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். எனக்கு ஏழு எட்டு வயதிலேயே சமைக்கக் கற்றுக் கொடுத்தனர். நான் மிகச் சிறிய வயதில் கிச்சனில் வேலை செய்த நினைவுகள் எனக்கு இருக்கின்றன.

Ajith Family
Ajith Family

எல்லாருமே இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பொது வாழ்க்கைக்கு வரும்போது, உங்களுக்கு நிறைய கமிட்மென்ட்களும் கடமைகளும் இருக்கும் அதை நிறைவேற்றுவதற்காக உங்களுக்கு மற்றவர்களின் தேவை இருக்கும். அது நேரத்தை மிச்சப்படுத்தும்.

உங்களுக்குத் தினசரி உதவி செய்ய ஒரு குழு இருப்பதை நான் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால் நான் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம் சில சமயம் அது உங்களைப் பாழாக்கி விடும்.

ஆரம்பத்தில் உங்கள் கை பையைத் தூக்கவும், மற்றவற்றுக்கும் உதவி செய்வார்கள். காலப்போக்கில் உங்களைச் சுற்றியிருக்கும் அனைவரிடத்திலும் அதை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுவீர்கள்.

நான் அப்படி இருந்திருக்கிறேன், இப்போது அதற்காக வெட்கப்படுகிறேன். அதனால்தான் இப்போது எல்லாவற்றிலுமிருந்து விலகி துபாயிலிருக்கிறேன். முக்கியமான காரணம் மோட்டார் ஸ்போர்ட்ஸ்தான். இங்கு நிறைய சர்க்யூட்டுகள் இருக்கு. ஒரு வகையில் அது எனக்கு உதவுகிறது.

இங்கு எல்லாவற்றையும் நானே செய்வதை ரசிக்கிறேன். குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்கள் தற்போது உதவுகின்றன.

அஜித்
அஜித்

மற்றவர்கள் உதவிக்கு இருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். ஆனால் அது உங்களைப் பாழாக்கக்கூடும். 20 வருடங்களுக்கு முன்பு என்னைச் சந்தித்திருந்தால், நீங்கள் என்னை வெறுத்திருப்பீர்கள்.

நான் பாழாகியிருந்தேன் என்று சொல்லவில்லை, ஆனால் என்னிடம் ஒரு குழு இருந்தது. உங்களைச் சுற்றி அதிகமானவர்கள் இருந்தால், வாழ்க்கை கடினமாகிவிடும். நான் நிறைய நேரத்தை அவர்களுக்கிடையிலான தினசரி சண்டைகளைத் தீர்ப்பதிலும், அவர்களை நிர்வகிப்பதிலும் வீணடித்தேன்.

அதனால், முடிந்தவரை சுயமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன். சில சமயங்களில் உதவி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் பல சமயங்களில் நீங்களே சமாளித்துக்கொள்ளலாம். இப்போது நான் என் முடிவுகளால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லோரிடமிருந்தும் விலகி இருக்கிறேன்.

திரைப்பட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு, ஊக்கத்துக்கு நன்றி. ஆனால் அது சில சமயம் போதைப்பொருள் போல ஆகிவிடும். புகழ் ஒரு போதை. என் முந்தைய அனுபவங்களால் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். நான் ரசிகர்கள் கொடுக்கும் புகழை ரசிக்கிறேன், ஆனால் அதைத் தொட விரும்பவில்லை, அதன் தாக்கத்தில் இருக்க விரும்பவில்லை." எனப் பேசியுள்ளார்.

``சூரசம்ஹாரத்தை அனிமேஷன் படமாக எடுத்தால் என்ன?" - ரசிகரின் கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில்

ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது. சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது. இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அன... மேலும் பார்க்க

Vaaheesan: "மத ரீதியான பாட்டு பண்ணாதன்னு எனக்கு அட்வைஸ் பண்ணுனாங்க" - வாகீசன் பேட்டி

வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகி... மேலும் பார்க்க

``என் முதுகில் குத்திக் குத்தி காயம், ரத்தம்'' - மேடையில் கலங்கி அழுத நடிகர் ஆனந்த் ராஜ்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி - எப்போது ரிலீஸ்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகராக அவதாரமெடுத்துள்ளார்.லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்திருந்தது.அப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல்களிலேயே, அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்த... மேலும் பார்க்க

``படம் எடுத்த பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்'னு நினைச்சேன்'' - திருமணம் குறித்து அபிஷன் ஜீவிந்த்

`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.அப்படத்தின் வெற்றியைத்... மேலும் பார்க்க

மாரி செல்வராஜ்: ``தமிழிலும் அர்ப்பணிப்புள்ள நடிகர்கள் இருக்கிறோம்'' - நடிகை ஆராத்யா விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஏ. எஸ். முகுந்தன் இயக்கத்தில், நடிகர் ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா, ஆராத்யா, முனீஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “மெட்ராஸ் மாஃபியா கம்... மேலும் பார்க்க