செய்திகள் :

Anant Kumar Singh: சிறையிலிருந்தவாரே 91,000 வாக்குகள்; வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்!

post image

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சுமார் 140-க்கும் மேற்பட்ட இடங்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று கிட்டத்தட்ட தாங்கள் ஆட்சியமைப்பதை உறுதிசெய்திருக்கிறது.

மோடி, நிதிஷ் குமார்
மோடி, நிதிஷ் குமார்

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் சிறையிலிருந்தவாறே வெற்றி பெற்றிருக்கிறார்.

மொகாமா தொகுதியில் போட்டியிட்ட ஆனந்த் குமார் சிங், சுமார் 91,000 வாக்குகள் பெற்று, ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பாளர் வீணா தேவியை சுமார் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார்.

ஆனந்த் குமார் சிங், நிதிஷ் குமார்
ஆனந்த் குமார் சிங், நிதிஷ் குமார்

ஜன் சுராஜ் கட்சியின் ஆதரவாளர் துலார்சந்த் யாதவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக நவம்பர் 2-ம் தேதியன்று கைதுசெய்யப்பட்டு 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் ஆனந்த் குமார் சிங் வைக்கப்பட்டிருக்கிறார்.

இவர், 2005, 2010-ல் ஐக்கிய ஜனதா தளம் சார்பிலும், 2015-ல் சுயேச்சையாகவும், 2020-ல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாகவும் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bihar Results: ``முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி" - காங்கிரஸ் தலைவர் ஓப்பன் டாக்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி 203 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.மகாபந்தன் கூட்டணி வெறும்... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: "SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது" - அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியின் தோல்விக்கு தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR)தான் காரணம் எனக் குற்றஞ்ச... மேலும் பார்க்க

Maithili Thakur: `போஜ்புரி பாடகி to அரசியல்வாதி' - பீகாரின் இளம் MLA; யார் இந்த மைதிலி தாக்கூர்?

பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 122 தொகுதிகளில் வெற்றிப்பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜே.டி.(யு) தலைமையில் என்.டி.ஏ கூட்டண... மேலும் பார்க்க

Bihar Results: ``நாங்கள் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்" - செல்வப்பெருந்தகை விளக்கம்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.பிற்பகல் 3 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 200+ இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. இதில், பா.ஜ.க... மேலும் பார்க்க

Chirag Paswan: தீவிர நிதிஷ் எதிர்ப்பு டு மெகா வெற்றிக்கு உறுதுணை - பாய்ச்சல் காட்டிய சிராக் பாஸ்வான்

ூரியிருக்கிபீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்க... மேலும் பார்க்க

US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?

அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் ... மேலும் பார்க்க