செய்திகள் :

Bihar: ``இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்; என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை" - நிதிஷ் கோரிக்கை

post image

பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.

மேலும், `ஒரு கோடி இளைஞர்களுக்கு அரசு வேலை, முதலமைச்சரின் பெண்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 2 லட்சம் வரையில் நிதியுதவி, வீடுதோறும் 125 யூனிட்டுகள் இலவச மின்சாரம், புதிதாக 50 லட்ச இலவச வீடுகள், மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் வரையில் இலவச சிகிச்சைகள், ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி, ஏழை, எளிய மாணவர்களுக்கு முதுகலை வரை இலவச கல்வி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் மெகா திறன் மையங்கள், நான்கு சர்வதேச விமான நிலையங்கள், செமி கண்டெக்டர் உற்பத்தி பூங்கா' என தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குறுதிகளை வானளவுக்கு அறிவித்திருக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் தேர்தல் வாக்குறுதிகள்
தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் தேர்தல் வாக்குறுதிகள்

இந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார், தனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமாறு வாக்காளர்களுக்கு வீடியோ மூலம் இன்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் நிதிஷ் குமார், ``பீகாரின் என் அன்பான சகோதர சகோதரிகளே, 2005 முதல் உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்திருக்கிறீர்கள். அந்த சமயத்தில் பீகாரி என்பது அவமானமாக இருந்தது.

அப்போதிருந்து, நேர்மையாக கடின உழைப்புடன் இரவும் பகலும் உங்களுக்காகச் சேவை செய்து வருகிறோம். கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், குடிநீர், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தியிருக்கிறோம்.

முந்தைய அரசாங்கம் பெண்களுக்காக எந்த வேலையும் செய்யவில்லை. இப்போது பெண்களை மிகவும் வலிமையானவர்களாக நாங்கள் மாற்றியிருக்கிறோம்.

இனி அவர்கள் யாரையும் சார்ந்திருக்க மாட்டார்கள், தங்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியும்.

ஆரம்பத்திலிருந்தே சமூகத்தின் அனைத்து வகுப்பினரையும் வளர்ச்சியடையச் செய்திருக்கிறோம்.

Bihar Election - நிதிஷ் குமார்
Bihar Election - நிதிஷ் குமார்

நீங்கள் இந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, உயர் சாதியாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் சரி, தலித்தாக இருந்தாலும் சரி அனைவருக்காகவும் நாங்கள் உழைத்துள்ளோம்.

என் குடும்பத்துக்காக எதையும் செய்யவில்லை. இப்போது, ​​ஒரு பீகாரியாக இருப்பது அவமானகரமான விஷயம் அல்ல, மரியாதைக்குரிய விஷயம்.

எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். மேலும் அதிக வேலைகள் செய்யப்படும். அது பீகாரை மிகவும் மேலும் வளர்க்கும், சிறந்த மாநிலங்களில் சேர்க்கும்" என்று கோரிக்கை விடுத்தார்.

பீகாரில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து போட்டியிட்டு 7-வது முறையாக முதல்வரான நிதிஷ் குமார், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பா.ஜ.க-வை கழற்றிவிட்டு ஆர்.ஜே.டி, காங்கிரஸுடன் கைகோர்த்து 8-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று பின்னர் அதே தேர்தலுக்கு முன்பாக அவர்களைக் கழற்றிவிட்டு மீண்டும் பா.ஜ.க-வுடன் சேர்ந்து 9-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க