செய்திகள் :

Bihar: 27 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன JDU வேட்பாளர்; ஆட்சியமைக்கும் NDA!

post image

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6:30 நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.

மேலும், 114 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட தாங்கள் மீண்டும் ஆட்சியமைப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்துவிட்டது.

நிதிஷ் குமார், மோடி
நிதிஷ் குமார், மோடி

மறுமுனையில் மகாபந்தன் கூட்டணி 9 இடங்களில் வெற்றிபெற்று, மேலும் 25 இடங்களில் முன்னிலையுடன் படுதோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ஒருவர் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.

பீகார் சட்டமன்றத் தேர்தல்
பீகார் சட்டமன்றத் தேர்தல்

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருப்பதன்படி, சந்தேஷ் சட்டமன்றத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ராதா சரண் ஷா 80, 598 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

இரண்டாம் இடம் பிடித்த ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் திபு சிங், ராதா சரண் ஷாவை விட 27 வாக்குகள் குறைவாக 80,571 வாக்குகள் பெற்றார்.

இத்தொகுதியில், ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் ராஜிவ் ரஞ்சன் ராஜ் 6,040 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தார்.

2015 மற்றும் 2022-ல் பீகார் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த ராதா சரண் ஷா முதல்முறையாக எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Modi: "காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக (MMC) மாறிவிட்டது" - மோடி

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத சூழலில் NDA 200+ தொகுதிகளைக் கைப்பற்றுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக ... மேலும் பார்க்க

Bihar Results: ``முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி" - காங்கிரஸ் தலைவர் ஓப்பன் டாக்

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி 203 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.மகாபந்தன் கூட்டணி வெறும்... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: "SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது" - அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியின் தோல்விக்கு தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR)தான் காரணம் எனக் குற்றஞ்ச... மேலும் பார்க்க

Maithili Thakur: `போஜ்புரி பாடகி to அரசியல்வாதி' - பீகாரின் இளம் MLA; யார் இந்த மைதிலி தாக்கூர்?

பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 122 தொகுதிகளில் வெற்றிப்பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜே.டி.(யு) தலைமையில் என்.டி.ஏ கூட்டண... மேலும் பார்க்க

Anant Kumar Singh: சிறையிலிருந்தவாரே 91,000 வாக்குகள்; வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்!

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சுமார் 140-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

Bihar Results: ``நாங்கள் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்" - செல்வப்பெருந்தகை விளக்கம்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.பிற்பகல் 3 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 200+ இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. இதில், பா.ஜ.க... மேலும் பார்க்க