செய்திகள் :

Bihar Results: ``முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி" - காங்கிரஸ் தலைவர் ஓப்பன் டாக்

post image

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14) காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி நிலவரப்படி 203 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

மகாபந்தன் கூட்டணி வெறும் 34 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்தட்ட தனது வெற்றியை உறுதி செய்துவிட்டது.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், இது சமூகநீதியின் வெற்றி என்றும், வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

நிதிஷ் குமார், மோடி
நிதிஷ் குமார், மோடி

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், நாகலாந்து, கேரளா ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான நிகில் குமார், இது முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி என்று கூறியிருக்கிறார்.

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய நிகில் குமார், ``இது எங்கள் கட்சிக் கட்டமைப்பின் பலவீனத்தைப் பிரதிபலிக்கிறது.

எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒரு கட்சி அதன் கட்டமைப்பைத்தான் நம்பியிருக்கிறது. கட்சிக் கட்டமைப்பு பலமாக இல்லாவிட்டால், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குச் செயல்பட முடியாது, எல்லாமே பாதிக்கும்.

எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் மிகவும் திறமையானவர்கள், ஆனால் இன்னும் சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

இது முழுக்க முழுக்க கட்சிக் கட்டமைப்பின் தோல்வி. அது வலுவாக இருந்திருந்தால், எங்கள் வேட்பாளர்களின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்" என்று கூறினார்.

Modi: "காங்கிரஸ்-முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸாக (MMC) மாறிவிட்டது" - மோடி

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத சூழலில் NDA 200+ தொகுதிகளைக் கைப்பற்றுமா என்பதுதான் தற்போதைய கேள்வியாக ... மேலும் பார்க்க

Bihar: 27 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆன JDU வேட்பாளர்; ஆட்சியமைக்கும் NDA!

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மாலை 6:30 நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 88 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது.மேலும், 114 இடங்களில் முன்னிலையில் இருக்க... மேலும் பார்க்க

பீகார் தேர்தல்: "SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது" - அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகாரில் எதிர்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணியின் தோல்விக்கு தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR)தான் காரணம் எனக் குற்றஞ்ச... மேலும் பார்க்க

Maithili Thakur: `போஜ்புரி பாடகி to அரசியல்வாதி' - பீகாரின் இளம் MLA; யார் இந்த மைதிலி தாக்கூர்?

பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் 122 தொகுதிகளில் வெற்றிப்பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். ஜே.டி.(யு) தலைமையில் என்.டி.ஏ கூட்டண... மேலும் பார்க்க

Anant Kumar Singh: சிறையிலிருந்தவாரே 91,000 வாக்குகள்; வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்!

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சுமார் 140-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

Bihar Results: ``நாங்கள் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்" - செல்வப்பெருந்தகை விளக்கம்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.பிற்பகல் 3 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 200+ இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. இதில், பா.ஜ.க... மேலும் பார்க்க