செய்திகள் :

Bihar Results: ``நாங்கள் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம்" - செல்வப்பெருந்தகை விளக்கம்

post image

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவம்பர் 14) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி தேசிய ஜனநாயகக் கூட்டணி 200+ இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன. இதில், பா.ஜ.க 94 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 83 இடங்களிலும், சீராக் பஸ்வான் கட்சி 20 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

நிதிஷ் குமார், மோடி
நிதிஷ் குமார், மோடி

மகாபந்தன் கூட்டணி வெறும் 30+ இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இதில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் மற்ற கட்சிகள் ஓரிரு இடங்களிலும் முன்னிலையிலும் இருக்கின்றன.

கருத்துக்கணிப்பில் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்றுதான் கூறப்பட்டன. ஆனால், தற்போது வெளிவரும் முடிவுகள் கருத்துக்கணிப்பையே பொய்யாக்கியிருக்கின்றன.

இந்த நிலையில், பீகாரில் நாங்கள் தோற்கவில்லை வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறார்.

பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, ``காங்கிரஸுக்கு எப்போதும் பின்னடைவு கிடையாது. அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும், ஆட்சியதிகாரம் வேண்டும் என்று காங்கிரஸ் ஆரம்பிக்கப்படவில்லை.

முகமில்லாதவர்களுக்கும், பேச்சுரிமை இல்லாதவர்களுக்குமான இயக்கம் காங்கிரஸ். வெற்றி, தோல்வி பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இது மக்கள் இயக்கம், மக்களுக்காக இயங்கிக் கொண்டே இருக்கும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

பீகாரில் தோல்வி என்று சொல்ல முடியாது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

முடிவைப் பொறுத்திருந்து பார்ப்போம். வெற்றிபெற்றால் துள்ளிக் குதிப்பதும், தோல்வியடைந்தால் படுத்துக்கொள்வதும் காங்கிரஸ் அல்ல.

பீகாரில் 17 லட்சம் வாக்குகள் அகற்றப்பட்டிருக்கின்றன. அவை என்ன வாக்குகள்? அதையெல்லாம் ஆய்வுசெய்ய வேண்டும்" என்று கூறினார்.

Anant Kumar Singh: சிறையிலிருந்தவாரே 91,000 வாக்குகள்; வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்!

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சுமார் 140-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

Chirag Paswan: தீவிர நிதிஷ் எதிர்ப்பு டு மெகா வெற்றிக்கு உறுதுணை - பாய்ச்சல் காட்டிய சிராக் பாஸ்வான்

ூரியிருக்கிபீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, மொத்தமுள்ள 243 இடங்க... மேலும் பார்க்க

US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?

அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் ... மேலும் பார்க்க

Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை

அரசியலில் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சொற்றொடர் `ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை'. அதேபோலத்தான், பீகாரில் ஆட்சிக்கு வரும் கூட்டணிகள் மாறலாம், ஆனால் முதல்வர் ஒருத்தர்தான். கடந்த 20 ஆண்டுகளா... மேலும் பார்க்க

பீகார்: ``2020-ல் நடந்த தவறு மீண்டும் நடந்தால்'' - தேர்தல் அதிகாரிகளை சாடிய தேஜஸ்வி யாதவ்

பீகார் தேர்தலில் மகாபந்தன் கூட்டணி தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் கணிப்புகள் கூறியபோது கடுமையாக மறுத்துவந்தார். வாக்கு எண்ணிக்கையில் இன்று (நவ. 14) காலை முதலே என்.டி.ஏ கூட்டணி முன்னிலை வகித்து ... மேலும் பார்க்க

தமிழ் புத்தாண்டு: `கலைஞர் கருணாநிதியின் அரசாணையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உடன்பாடு இல்லையா?'

அண்மையில் வெளியான 2026-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியலிலும், (அதாவது திமுகவின் நடப்பு ஆட்சிக் காலம் முடிவடைய இருக்கிற சூழலில், கடைசி ஆண்டிற்கான விடுமுறை தினப் பட்டியல்) `தை’ முதல் ந... மேலும் பார்க்க